மேலும் அறிய

பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. கருணைக்கொலை பண்ணுங்க.. கணவர் மனு!

எனது தற்போதைய மனைவி அக்குழந்தைக்குத் தீங்கு விளைவிக்க முயன்றார். இதனால் நான் காவல்துறையை அணுகிய போதிலும் அந்தப் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்று கிரீட் படேல் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் தனது மனைவி கொடுமைப்படுத்துவதால் கருணைக்கொலை செய்து விடுமாறு ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சூரத்தைச் சேர்ந்த கிரீட் படேல் என்பவர் தான் இத்தகைய மனுவை அளித்துள்ளார். தனது மனைவியின் துன்புறுத்தல் குறித்த தனது புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தியின் உச்சிக்குத் தள்ளப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புலம்பி தீர்த்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தனிப்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி கோருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

கிரீட்  படேல் அளித்த தகவலின்படி, அவரது திருமணம் 2024ம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. தனது மனைவி, மாமியார் மற்றும் பிற உறவினர்கள் தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். பணம் தர மறுத்ததால் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனக்கு எதிராகத் தொடரப்பட்ட ஜீவனாம்சம் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகள் அழுத்தம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் கீரிட் படேல் தெரிவித்துள்ளார்.

கிரீட் படேல் முன்வைத்த மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளில் ஒன்று. அவரது முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகன் தொடர்பானதாக உள்ளது. எனது தற்போதைய மனைவி அக்குழந்தைக்குத் தீங்கு விளைவிக்க முயன்றார். இதனால் நான் காவல்துறையை அணுகிய போதிலும் அந்தப் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும் கிரீட் படேல் கூறியுள்ளார். 

எனக்கும், என் மனைவிக்கும் இது மூன்றாவது திருமணமாகும். என் மனைவி முந்தைய கணவர்களிடமிருந்தும் பணம் பறித்துள்ளார். அவளை கொள்ளைக்கார மணமகள் என சொல்லலாம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கிரீட் படேல் தெரிவித்துள்ளார். பெண்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களைத் தனது மனைவி தவறாக பயன்படுத்துகிறார். 

குடும்பச் சண்டைகளுக்கான வாக்குவாதங்களை தொடங்கி விட்டு பின்னர் காவல்துறை அல்லது பெண்கள் பாதுகாப்பு உதவி எண்களைத் தொடர்பு கொண்டு புகாரளிக்கிறார். அதன் விளைவாக தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா நடந்ததா என்பதை கூட சரிபார்க்கவில்லை. அதுமட்டுமல்லாமல் குடும்பச் சண்டைகளை எதிர்கொள்ளும் ஆண்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லாதது குறித்து படேல் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அடுத்தக்கட்ட முடிவை எடுப்பேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget