மேலும் அறிய

சினிமா பாணியில் வெளிநாட்டு தங்கம் கடத்தல்.. சேஸ் செய்த அதிகாரிகள்.. நடந்தது என்ன?

நாடு தழுவிய அளவில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக தங்கம் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது. 

அயன் பட பாணியில் வெளிநாட்டு தங்கம் கடத்தல்:

இந்த நிலையில், நாடு தழுவிய அளவில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். 

வங்கதேசம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் தங்கம் கடத்தப்பட்டு, மும்பை, நாக்பூர் (மகாராஷ்டிராவில்), வாரணாசி (உத்தர பிரதேசம்) ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டதாக வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதுகுறித்து டிஆர்ஐ வெளியிட்ட அறிக்கையில், "நேற்றும் நேற்று முன்தினமும் வாரணாசி, நாக்பூர், மும்பை நகரங்களில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாலை மற்றும் ரயில்கள் மூலம் வெளிநாட்டு தங்கத்தை கடத்திய கும்பல் பிடிபட்டுள்ளது.

சேஸ் செய்த அதிகாரிகள்:

நேற்று முன்தினம் மாலை, கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், நாக்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தபோது, நாக்பூரை சேர்ந்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 8.5 கிலோ வெளிநாட்டு தங்கத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, கடத்தப்பட்ட தங்கத்தை கைப்பற்றி இருவரை கைது செய்தனர்.

வாரணாசியில் காட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையை தொடர்ந்து மூன்று மணி நேரம் சேஸ் செய்து, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 18.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. காரின் ஹேண்ட்பிரேக்கிற்கு கீழே உள்ள பகுதியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது.

வாரணாசியில் இருந்து ரயிலில் 4.9 கிலோ தங்கத்தை ஏற்றிச் சென்ற குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரை மும்பை பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் மும்பையிலும், இருவர் வாரணாசியிலும், நான்கு பேர் நாக்பூரிலும் கைது செய்யப்பட்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கடத்தல்:

சமீபத்தில், மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில், தங்கக் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்கக் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பொருள், வன விலங்குகள், வைரம் ஆகியவற்றின் கடத்தலும் அதிகரித்து விட்டன. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget