மேலும் அறிய

சினிமா பாணியில் வெளிநாட்டு தங்கம் கடத்தல்.. சேஸ் செய்த அதிகாரிகள்.. நடந்தது என்ன?

நாடு தழுவிய அளவில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக தங்கம் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது. 

அயன் பட பாணியில் வெளிநாட்டு தங்கம் கடத்தல்:

இந்த நிலையில், நாடு தழுவிய அளவில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். 

வங்கதேசம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் தங்கம் கடத்தப்பட்டு, மும்பை, நாக்பூர் (மகாராஷ்டிராவில்), வாரணாசி (உத்தர பிரதேசம்) ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டதாக வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதுகுறித்து டிஆர்ஐ வெளியிட்ட அறிக்கையில், "நேற்றும் நேற்று முன்தினமும் வாரணாசி, நாக்பூர், மும்பை நகரங்களில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாலை மற்றும் ரயில்கள் மூலம் வெளிநாட்டு தங்கத்தை கடத்திய கும்பல் பிடிபட்டுள்ளது.

சேஸ் செய்த அதிகாரிகள்:

நேற்று முன்தினம் மாலை, கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், நாக்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தபோது, நாக்பூரை சேர்ந்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 8.5 கிலோ வெளிநாட்டு தங்கத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, கடத்தப்பட்ட தங்கத்தை கைப்பற்றி இருவரை கைது செய்தனர்.

வாரணாசியில் காட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையை தொடர்ந்து மூன்று மணி நேரம் சேஸ் செய்து, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 18.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. காரின் ஹேண்ட்பிரேக்கிற்கு கீழே உள்ள பகுதியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது.

வாரணாசியில் இருந்து ரயிலில் 4.9 கிலோ தங்கத்தை ஏற்றிச் சென்ற குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரை மும்பை பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் மும்பையிலும், இருவர் வாரணாசியிலும், நான்கு பேர் நாக்பூரிலும் கைது செய்யப்பட்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கடத்தல்:

சமீபத்தில், மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில், தங்கக் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்கக் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பொருள், வன விலங்குகள், வைரம் ஆகியவற்றின் கடத்தலும் அதிகரித்து விட்டன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget