மேலும் அறிய

சினிமா பாணியில் வெளிநாட்டு தங்கம் கடத்தல்.. சேஸ் செய்த அதிகாரிகள்.. நடந்தது என்ன?

நாடு தழுவிய அளவில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக தங்கம் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது. 

அயன் பட பாணியில் வெளிநாட்டு தங்கம் கடத்தல்:

இந்த நிலையில், நாடு தழுவிய அளவில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். 

வங்கதேசம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் தங்கம் கடத்தப்பட்டு, மும்பை, நாக்பூர் (மகாராஷ்டிராவில்), வாரணாசி (உத்தர பிரதேசம்) ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டதாக வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதுகுறித்து டிஆர்ஐ வெளியிட்ட அறிக்கையில், "நேற்றும் நேற்று முன்தினமும் வாரணாசி, நாக்பூர், மும்பை நகரங்களில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாலை மற்றும் ரயில்கள் மூலம் வெளிநாட்டு தங்கத்தை கடத்திய கும்பல் பிடிபட்டுள்ளது.

சேஸ் செய்த அதிகாரிகள்:

நேற்று முன்தினம் மாலை, கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், நாக்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தபோது, நாக்பூரை சேர்ந்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 8.5 கிலோ வெளிநாட்டு தங்கத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, கடத்தப்பட்ட தங்கத்தை கைப்பற்றி இருவரை கைது செய்தனர்.

வாரணாசியில் காட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையை தொடர்ந்து மூன்று மணி நேரம் சேஸ் செய்து, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 18.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. காரின் ஹேண்ட்பிரேக்கிற்கு கீழே உள்ள பகுதியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது.

வாரணாசியில் இருந்து ரயிலில் 4.9 கிலோ தங்கத்தை ஏற்றிச் சென்ற குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரை மும்பை பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் மும்பையிலும், இருவர் வாரணாசியிலும், நான்கு பேர் நாக்பூரிலும் கைது செய்யப்பட்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கடத்தல்:

சமீபத்தில், மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில், தங்கக் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்கக் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பொருள், வன விலங்குகள், வைரம் ஆகியவற்றின் கடத்தலும் அதிகரித்து விட்டன. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget