மேலும் அறிய

இரவு 9 மணிக்கு டீம் கால்; திட்டவட்டமாக மறுத்த Gen Z ஊழியர்- இணையத்தில் வைரலாகும் விவாதம்

ஜென் சி தலைமுறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் இரவு 9 மணிக்கு வந்த அலுவலக அழைப்பை ஏற்க மறுத்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கார்ப்பரேட் உலகில் வேலை நேரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஜென் சி (Gen Z) தலைமுறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் இரவு 9 மணிக்கு வந்த அலுவலக அழைப்பை ஏற்க மறுத்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து லிங்க்டுஇன் தளத்தில் சஞ்சித் கோயல் போஸ்ட் இட்டுள்ளார். அதில் பகிரப்பட்டுள்ள தகவலின்படி, நிறுவனம் ஒன்றின் மேலாளர் ஒருவர், தனது குழுவில் உள்ள ஜென் சி ஊழியரை இரவு 9 மணியளவில் அலுவலக வேலை தொடர்பாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.

நோ சொன்ன ஊழியர்

ஆனால், அந்த ஊழியர் அந்த அழைப்பை ஏற்க மறுத்ததோடு, குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தற்போது அலுவலக நேரம் முடிந்துவிட்டது. வேலை தொடர்பான எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதனை நாளை காலை வழக்கமான வேலை நேரத்தில் திட்டமிடுங்கள் என மிகவும் வெளிப்படையாகவும், நேரடியாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: Minister Raj mohan: பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு நோ; தனியார் பள்ளி கல்விக்கட்டணம்- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

மேலாளர் ’’இரவு 9 மணி மீட்டிங்கில் எல்லோருமே  இணைந்து விட்டார்கள்; நீங்கள்தான் இணையவில்லை’’ என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த ஊழியர், ’’மற்ற எல்லோரும் சோர்ந்துவிட்டனர். நான் அப்படி ஆகக்கூடாது என்று விரும்புகிறேன்’’ என்று கூற, ‘’இந்த ஒரு மீட்டிங்தானே’’ என்று மேலாளர் விடாமல் கேட்க, ’’அப்படியானால், அதை வேலை நேரத்தில் வையுங்கள். ஒரு முறைதான் என்றுதான் எல்லாமே ஆரம்பிக்கும்’’ என்று பேசியுள்ளார்.  

இந்த பதிவு இணையத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே வைரலாகப் பரவி, பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் பலர் இதற்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கை - வேலை பேலன்ஸ்

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அலுவலக வேலைக்கும் இடையிலான எல்லையை சரியாகப் பேணுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று கூறி பலரும் அந்த ஊழியரைப் பாராட்டியுள்ளனர். டாக்ஸிக் பணி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர, இதுபோன்ற துணிச்சலான முடிவுகள் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே வேளையில், சில மூத்த ஊழியர்கள் மற்றும் நிறுவனர்கள் இதனை விமர்சித்துள்ளனர். எதிர்பாராத அவசரகால சூழ்நிலைகளில் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையோடு நடந்துகொள்வதுதான் சரியான தொழில்முறை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

வேலை- வாழ்வின் ஓர் அங்கம் மட்டுமே

வேலை என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம் மட்டுமே என்ற மனநிலை இளைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளதை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது. நவீன காலப் பணிச்சூழலில் நிறுவனங்களும், மேலாளர்களும் ஊழியர்களின் தனிப்பட்ட நேரத்தை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த இணைய விவாதம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 3-ம் தேதி (03.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
சென்னையில ஜூலை 3-ம் தேதி (03.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TN PONGAL GIFT : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
Embed widget