மேலும் அறிய

Bhartiya Bill: பொய் சொல்லி திருமணம் செய்தால் சிறை.. யாருக்கு மரண தண்டனை? புதிய பாரதிய தண்டனை சட்டம் சொல்வது என்ன?

மத்திய அரசின் புதிய தண்டனை சட்டங்கள் பெண்களுக்கு எதிரான குற்றம் இழைப்பவர்களுக்கு, கடும் தண்டனையை விதிக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய தண்டனை சட்டங்கள் பெண்களுக்கு எதிரான குற்றம் இழைப்பவர்களுக்கு, கடும் தண்டனையை விதிக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதிய தண்டனை சட்டங்கள்:

இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றி, புதிய தண்டனை சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய ஆதார சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்ற வழிவகை செய்கிறது. அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை பாரதிய நியாய சங்ஹீத என மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக்  சுரக் ஷ சங்ஹீத மற்றும் இந்திய ஆதார சட்டத்தின் பெயரை பாரதிய சக் ஷயா என பெயரை மாற்ற இந்த மசோதாக்கள் பரிந்துரைக்கின்றன.

”பொய்யான வாக்குறுதிகளும் குற்றமே”

புதிய சட்டமசோதாக்கள் தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  ஏற்கனவே உள்ள இந்திய தண்டனைச் சட்டம் எண் 1860-க்கு மாற்றாக புதிய தண்டனைச் சட்டம் அமைந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நியாயம் கிடைக்க உதவும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விளக்கத்தில் ”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல சமூக பிரச்சனைகள் தொடர்பாக புதிய மசோதாவில் விவாதிக்கப்பட்டுள்ளன. இனி திருமணம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு மற்றும் தவறான அடையாளத்தின் கீழ் பொய்யான வாக்குறுதி அளித்து, பெண்களுடன் உறவு கொள்வது குற்றமாகிறது. திருமணம் செய்து கொள்கிறேன் என்பது போன்ற போலியான வாக்குறுதிகளை அளித்து, உடலுறவு கொண்டு ஏமாற்றியவர்களை தண்டிப்பதற்கு என இதுவரை எந்தவொரு தனிச்சட்டமும் இல்லை. இந்த நிலையில், தான் அதுவும் குற்றவரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் தண்டனை:

தற்போது நிலைக்குழுவின் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ள அந்த மசோதாவின்படி,  நிறைவேற்றும் எண்ணாம் இல்லாத வாக்குறுதிகளை அளித்து உடலுறவு கொண்டு பெண்களை ஏமாற்றுவது, பாலியல் வன்கொடுமையாக கருதப்படும். இதற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறை தணடனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம். வேலை வாங்கி தருவதாக கூறுவது, பதவி உயர்வு பெற்று தருவதாக கூறுவது, அடையாளங்களை மறைப்பது போன்றவையும் இந்த மோசடியில் அடங்கும்.

தண்டனை விவரங்கள்:

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், மரண தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு, 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதிபட்சமாக மரண தண்டனையும் விதிக்கப்படலாம். ஒரு காவல்துறை அதிகாரி, அரசு ஊழியர் மற்றும் ஆயுதப்படை காவலர் யரேனும்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், அவருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்படும். அது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.

”விரைவான நீதியை வழங்கவும், மக்களின் சமகாலத் தேவைகள் மற்றும் நம்பிக்கையான சட்ட அமைப்பை உருவாக்கவும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டடுள்ளன” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget