மேலும் அறிய

Watch Video: கொச்சிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம்.. என்ஜினில் தீ பிடித்ததால் அவசரமாக தரையிறக்கம்..!

விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் இருந்து கொச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

என்ன காரணம்..?

பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. முதற்கட்ட விசாரணையில் விமானத்தின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டு, சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது தெரிய வந்துள்ளது. மேலும், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

இதன்காரணமாக, பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்ட நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்” என்று கூறியுள்ளது. 

மேலும், “அவசரமாக தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தது. அதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விமானம்  IX 1132, பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு 11.12 மணிக்கு தரையிறங்கியது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், விமானத்தில் இருந்த ஊழியர்கள் வலது இயந்திரத்தில் தீப்பிடித்ததைக் கண்டனர். இதைத் தொடர்ந்து உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு (ஏடிசி) தகவல் தெரிவிக்கப்பட்டது. தரையிறங்கிய உடனேயே தீ அணைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு-கொச்சி விமானம் புறப்பட்ட பிறகு வலது இன்ஜினில் இருந்து சந்தேகத்திற்கிடமான தீப்பிழம்புகள் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கையாக தரையிறக்கம் செய்யப்பட்டதாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் (BIAL) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.  

விமானத்தில் பயணித்த பயணிகள்:

புனேவில் வசிக்கும் பயணி பியானோ தாமஸ் கூறுகையில், ”விமானம் தீப்பற்றி எரிவதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் அனைவரும் பயந்தோம். விமானம் திரும்பி பெங்களூரில் இரவு 11.15 மணிக்கு தரையிறங்கியது. சரியாக 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

ஏர்பஸ் ஏ320 விமானத்தில் 175க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். புனேயில் இருந்து இரவு 8:20 மணிக்கு புறப்பட்டு இரவு 9:50 மணியளவில் பெங்களூரு சென்றடைந்தது. மீண்டும் தீ விபத்து காரணமாக விமானம் தரையிறங்கிய உடனேயே, அனைத்து கதவுகள் மற்றும் அவசர கதவுகள் திறக்கப்பட்டு, சரிவுகள் வெளியே வந்து, இந்த ஸ்லைடுகள் வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வாகனங்கள் வரும்போது ஓடுபாதைக்கு அருகில் உள்ள வயல்களை நோக்கி ஓடச் சொன்னோம். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, விமான நிறுவனம் பேருந்துகளை ஏற்பாடு செய்து, பின்னர் பயணிகள் அனைவரும் முனைய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.” என்று தெரிவித்தார். 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார்.

முன்னதாக, 137 பயணிகளுடன் பெங்களூரு செல்லும் மற்றொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் "அவசர தரையிறக்கம்" செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகள்.. ”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக விருதை வென்ற லோகேஷ் ரகுராமன்
அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகள்.. ”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக விருதை வென்ற லோகேஷ் ரகுராமன்
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட்  தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட் தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகள்.. ”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக விருதை வென்ற லோகேஷ் ரகுராமன்
அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகள்.. ”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக விருதை வென்ற லோகேஷ் ரகுராமன்
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட்  தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட் தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
T20 World Cup 2024: சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vairamuthu: உருப்படியான திட்டம் வேண்டும்.. வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்
உருப்படியான திட்டம் வேண்டும்.. வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்
PM Modi Selfie: வாவ்..! இத்தாலி பிரதமர் மெலோனி உடன் மோடி எடுத்த செல்ஃபி - இணையத்தில் படுவைரல்
வாவ்..! இத்தாலி பிரதமர் மெலோனி உடன் மோடி எடுத்த செல்ஃபி - இணையத்தில் படுவைரல்
Embed widget