மேலும் அறிய

பீகாரின் முதல் H3N2 பெண் நோயாளி குணமடைந்தார்: சுகாதார அதிகாரிகள் தகவல்

பீகார் மாநிலத்தின் முதல் H3N2 நோயாளி தொற்றிலிருந்து குணமடைந்தார். 30 வயதான பெண் மருத்துவ மாணவிக்கு கடந்த வாரம் H3N2 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பீகார் மாநிலத்தின் முதல் H3N2 நோயாளி தொற்றிலிருந்து குணமடைந்தார். 30 வயதான பெண் மருத்துவ மாணவிக்கு கடந்த வாரம் H3N2 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதான் பீகார் மாநிலத்தின் முதல் H3N2 தொற்றாக பதிவானது. இந்நிலையில் அந்த மாணவி தற்போது தொற்றிலிருந்து பூரண குணமடைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஐசிஎம்ஆரின் ராஜேந்திர மெமோரியல் ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸின் இயக்குநர் மருத்துவர் கிருஷ்ண பாண்டே கூறுகையில், "10 நாட்களுக்கு முன்னர் என்னிடம் ஒரு மருத்துவ மாணவி சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு காய்ச்சலும் வறட்டு இருமலும் இருந்தது. அவருக்கு ஆஸெல்டமிவிர் ஆண்ட்டி வைரல் ட்ரக் கொடுத்தோம். இப்போது அவர் குணமாகிவிட்டார்" என்றார்.

அச்சுறுத்தும்  H3N2 அறிவுறுத்தும் அரசு:

காய்ச்சல் போன்ற நோய் அல்லது கடுமையான சுவாச நோய்த்தொற்று போன்றவற்றால் வெளிப்படும் சுவாச நோய்க்கிருமிகளின் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்:

பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸான H3N2 வகை வைரஸ் அதிகம் பரவி வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தொற்று மற்றும் h3n2 வைரஸ் பாதிப்புகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா மற்றும் h3n2 வைரஸ் சிகிச்சைக்காக மருந்துகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் இருப்பு, மருத்துவமனையில் படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. "கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவலைக்குறிய விஷயமாக உள்ளது என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கொரோனா தடுப்பூசியால் நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

கண்காணிக்கும் அரசு:

இந்த காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் ”பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பருவகால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஹெச்3என்2 வகை காய்ச்சல் தொடர்பாகவும், இணை நோய்கள், உயிரிழப்புகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ஹெச்3என்2 காய்ச்சலால் இதுவரை கர்நாடகா மற்றும் ஹரியானாவில் தலா ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தடுப்பு நடவடிக்கைகள்:

நோயாளிகளை வகைப்படுத்துதல், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான www.mohfw.nic.in மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளமான www.ncdc.gov.in ஆகியவற்றிலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒசெல்டாமிவிர் என்ற மருந்து இந்தக் காய்ச்சலுக்கு உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பொது சுகாதார மையங்களில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget