மேலும் அறிய

S Jaishankar: வளர்ந்த நாடுகள் பேசுறாங்களே தவிர செயல் எதுவும் செய்றதில்லை.. கறாராக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதிலும் இந்தியா உலகிற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜி-20 அமைச்சர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு, அடுத்த மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இது, உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஜி-20 அமைப்பு:

இந்த நிலையில், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதிலும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதிலும் இந்தியா உலகிற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜெய்சங்கரிடம், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் வளர்ந்த நாடுகளின் பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர், "பிரசங்கம் செய்பவர்கள், அதை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

"வளர்ந்த நாடுகள் பேசுறாங்களே தவிர, செயல் எதுவும் செய்றதில்லை"

இந்தியா தனது செயல்களின் மூலம் உலக நாடுகளை முன்னோக்கி அழைத்து செல்லும் வழியைக் காட்ட வேண்டியிருந்தது. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நம் செயல்களால், உலகிற்கு வழிகாட்ட வேண்டும். மேடைகளில் விவாதிக்க வேண்டும். ஆனால், மக்கள் அளித்த வாக்குறுதிகளில் இருந்து (பேச்சுக் கடைகளில்) பின்வாங்கினால் நாம் சங்கடப்பட வேண்டியிருக்கும். உலகளாவிய தெற்கின் குரலாக இருப்பது எங்கள் பொறுப்பு.

நாங்கள் 125 நாடுகளுக்குச் சென்று அவர்களிடம் ஜி20 விவகாரங்கள் குறித்து கேட்டுள்ளோம். காலநிலை பிரச்னை மோசமாகி வருகிறது. இது தனியாம் சம்பவம் அல்ல. காலநிலை பேரழிவுகள் தொடர்ந்து நிகழ்கிறது. பெரும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்துகின்றன. காலநிலை மாற்றங்களால் விநியோகச் சங்கிலிகள் தடைபட்டால், உங்கள் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மோதல் (உக்ரைன் போர்) எரிபொருள், உணவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொருளாதார விளைவுகளுடன் கூடிய காலநிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. உலகின் நிலைமை முன்னெப்போதையும் விட மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

ஜி-20 என்பது உணவு-ஆற்றல்-காலநிலை பற்றியது. நமது அன்றாட வாழ்க்கை முறையை மாற்றி, பருவநிலைக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டுவராத வரையில், எதுவும் மாறாது. நாங்கள் மக்கள் பங்கேற்பை இலக்காகக் கொண்டுள்ளோம். இது எங்கள் கூட்டுப் பொறுப்பு, இதுவே எங்களின் மெசேஜ்.

ஜி20 மாநாட்டை அரங்கு மற்றும் டெல்லியை தாண்டி நாடு முழுவதும் கொண்டு செல்ல பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் சாமானியர்களுக்கு, அரசியல் என்பது ஒரு தொலைதூர விஷயம். அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய பிரச்சினைகளை ஜி20 அமைப்பில் எழுப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
CM Vijay Letter to Modi: “கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Tamilnadu Round Up: டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
Embed widget