மேலும் அறிய

Mahua Moitra: பறிக்கப்படுகிறதா மஹூவா மொய்த்ரா எம்.பி. பதவி? - குற்றச் செயல் என நாடாளுமன்ற நெறிமுறைக்குழு அறிக்கை?

TMC MP Mahua Moitra: லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ராவின் பதவியை பறிக்க வேண்டும் என, நாடாளுமன்ற நெறிமுறைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TMC MP Mahua Moitra: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக,  நாடாளுமன்ற நெறிமுறைக் குழு 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு:

மஹுவா மொய்த்ரா அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான பயனர் ஐடியைப் பகிர்ந்து கொண்டதாகவும், தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இருந்து பணம் மற்றும் வசதிகளைப் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்நிலையில் விசாரணைக்குழு 500 பக்க அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும், குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவை சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஆங்கில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நாடாளுமன்ற நெறிமுறைக் குழு அறிக்கை:

மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டில் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு 500 பக்க அறிக்கையை தயார் செய்துள்ளதாக ஆங்கில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, “திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க அனுமதிக்கக் கூடாது. அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும். மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கைகள் "மிகவும் ஆட்சேபனைக்குரியது, நெறிமுறையற்றது, கொடூரமானது மற்றும் குற்றவியல் செயலாகும். இது கடுமையான தண்டனைக்குரியது.  இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாகவும், தீவிரமாகவும், நாடாளுமன்ற அமைப்பு ரீதியாகவும், கால வரையற்ற விரிவான விசாரணையை இந்திய அரசு நடத்த வேண்டும்” என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று ஆஜராகிறார் மஹுவா மொய்த்ரா:

நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் விசாரணைக்கு கடந்த வாரம் ஆஜரானபோது, தன்னிடம் மோசமான கேள்விகள் முன் வைக்கப்படுவதாக மஹுவா மொய்த்ரா பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். இதுதொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கும் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் விசாரணைக்காக மஹுவா மொய்த்ரா ஆஜராக உள்ளார்.

மஹுவா சொல்லும் விளக்கம் என்ன?

மக்களவை நெறிமுறைக் குழு கூட்டத்தில் பேசிய மஹுவா மொய்த்ரா, “தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் நட்புரீதியில் கடவுச்சொல்லை பகிர்ந்து கொண்டேன். இதில் சட்ட விதி மீறல் எதுவும் இல்லை. தான் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் தன்னுடையது தான். இதற்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை என பதிலளித்து இருந்தார். முன்னதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி மஹூவா மொய்த்ரா தன்னிடம் பணம் பெற்றது மட்டுமின்றி, அவருடைய மக்களவைக்கான மின்னஞ்சல் ஐ.டி. மற்றும் கடவுச்சொல்லையும் தனக்கு அளித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவிற்கு முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.  

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget