மேலும் அறிய

Mizoram: தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாளில் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன?

மிசோரத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியை மாற்றக் கோரி மிசோரம் முழுவதும் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஐந்து மாநில தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.

நக்சல்களின் தாக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மிசோரத்தில் நவம்பர் மாதம் 7ஆம் தேதியும் மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஐந்து மாநில தேர்தல்:

ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் தெலங்கானாவில் நேற்றும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் நாளை மறுதினம் (டிசம்பர் மாதம் 3ஆம் தேதி) எண்ணப்பட்டு அறிவிக்கப்படவிருந்தது. ஆனால், மிசோரம் மாநிலத்தில் மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பை வேறு நாளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மிசோரத்தில் கிறிஸ்தவ சமூகத்தவரே பெரும்பான்மையான மக்களாக உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை மேற்கொள்வது வழக்கம். இப்படியிருக்க தேர்தல் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தால், தங்களின் மத சடங்குகள் தடைபடும் எனக் கூறி, தேர்தல் முடிவுகளை தள்ளிவைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், மிசோரம் மக்களின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் இருந்து வந்தது. இச்சூழலில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியை மாற்றக் கோரி மிசோரம் முழுவதும் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். சமூக சேவை அமைப்புகள், தேவாலயங்கள், மாணவர் அமைப்புகள் ஆகியவற்றின் குடை அமைப்பான மிசோரம் என்ஜிஓ ஒருங்கிணைப்புக் குழு (என்ஜிஓசிசி) ஒரே நேரத்தில் போராட்டங்களை ஒருங்கிணைத்தது.

தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு:

இந்த நிலையில், மிசோரத்தின் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்கு பதில் டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "டிசம்பர் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மிசோரம் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பதால், 3ஆம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) பதில் வேறு வார நாளில் வாக்குகள் எண்ணும் தேதியை மாற்றக் கோரி பல்வேறு தரப்பிலிருந்து ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்த தேர்தல் ஆணையம், டிசம்பர் 3ஆம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) பதில் டிசம்பர் 4ஆம் தேதி (திங்கட்கிழமை) மிசோரம் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலுக்கான எண்ணும் தேதியை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக சோரம் மக்கள் இயக்கம் உள்ளது. அதற்கு இணையான செல்வாக்கமிக்க கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget