மேலும் அறிய

Andhra Train Mishap: ஆந்திராவில் 14 பேரை பலிவாங்கிய ரயில் விபத்து - ஓட்டுனர் கிரிக்கெட் பார்த்தது விசாரணையில் அம்பலம்

Andhra Train Mishap: கடந்த ஆண்டு ஆந்திராவில் 14 பேர் பலியான ரயில் விபத்திற்கான காரணத்தை, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்/

Andhra Train Mishap: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரா ரயில் விபத்து:

ஆந்திர மாநிலம் , விஜயநகரம் மாவட்டம், கந்தகப்பள்ளியில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில், இரவு 7 மணியளவில் ராயகட பயணிகள் ரயில் பின்னால் இருந்து விசாகப்பட்டினம் பலாசா ரயிலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதற்கு காரணம் அந்த ரயிலின்  ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தங்களது தொலைபேசியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து தான், என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.  

கவனச் சிதறல்களை தடுக்க நடவடிக்கை

இந்திய ரயில்வேயால் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்ணவ்,  ”சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விபத்தானது, பணியின் போது லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் கிரிக்கெட் போட்டியை கண்டதால் ஏற்பட்ட கவனத்தை சிதறலால் நிகழ்ந்துள்ளது. இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் கவனமாக இருப்பதை உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரயிலை பாதுகாப்பாக இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

பாதுகாப்பில் கவனம்:

நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிப்போம், அது மீண்டும் நடக்காமல் இருக்க  ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.  ரயில்வே பாதுகாப்பு ஆணையர்களின் (CRS) உத்தியோகபூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், விபத்து நடந்த உடனேயே ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ”ராயகட பாசஞ்சர் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுனர் மோதியதில் தவறு இருப்பது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, குறைபாடுள்ள இரண்டு ஆட்டோ சிக்னல்களை அவர்கள் புறக்கணித்தனர்” என்பது தெரிய வந்தது.  இந்த விபத்தில் இரு பணியாளர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget