மேலும் அறிய

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கொரோனா நோயாளி...மருத்துவர்களின் அலட்சியமே காரணம்...விசாரணையில் அம்பலம்..!

இரண்டாம் கொரோனா அலையின்போது, நொய்டாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்ததற்கு ஐந்து மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது. முதலாம் அலை, இரண்டாம் அலை என தொடர் கொரோனா அலையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். சுகாதார ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

முதலாம் அலையை ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாக பதிவாகின. தற்போது, கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில், இரண்டாம் கொரோனா அலையின்போது, நொய்டாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்ததற்கு ஐந்து மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் ரெம்டெசிவிர் ஊசியை வாங்கிய போதிலும், மருத்துவமனையில் சரியான நேரத்தில் அவருக்கு ரெம்டெசிவிர் ஊசி போடப்படவில்லை என கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அந்த இளைஞரின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

காஜியாபாத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். கௌதம் புத் நகரின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் திகம் சிங் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304A (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) கீழ் காவல் நிலையத்தில் யதர்த் மருத்துவமனை மருத்துவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் புகாரை விசாரித்து, குற்றச்சாட்டுகள் உண்மை என திகம் சிங் தலைமையிலான விசாரணை குழு கண்டறிந்துள்ளது. இருப்பினும், யதர்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கபில் தியாகி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என கூறியுள்ளார். 

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "நோயாளி ஆபத்தான நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அரை மணி நேரம் தாமதித்திருந்தால், நோயாளி உயிர் பிழைத்திருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்.

ஆனால், இங்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சுமார் 35 நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தினர் அவரை டெல்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த ஆண்டு தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது சவாலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சிறப்பாகவே பணியாற்றினர். 

ரெம்டெசிவிர் ஊசியை சரியான நேரத்தில் வழங்கவில்லை என்ற குடும்பத்தின் குற்றச்சாட்டை கருத்தில் எடுத்து கொண்டாலும், கொரோனா வைரஸ் சிகிச்சையில் அந்த ஊசி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவர்களின் குடும்பம் ஒருவரை இழந்துவிட்டது. அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
iPhone 200mp Camera: DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
Embed widget