மேலும் அறிய

2G Case: யாரும் எதிர்பார்க்கல.. 2ஜி வழக்கில் ட்விஸ்ட்.. கனிமொழி, ஆ. ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி!

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ. ராசாவை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புதல்.

2G Case: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகெடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக மூத்த தலைவர் கனிமொழியை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக  சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்று 2ஜி. கடந்த 2014ஆம் ஆண்டு, காங்கிரஸ் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக 2ஜி ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 

2ஜி வழக்கின் பின்னணி:

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது,  தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அலைக்கற்றின் உரிமத்தை வழங்கியதாக ஆ. ராசா மீது புகார் எழுந்தது. இதனால், மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் முதலீட்டாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் டி. சஞ்சய் சந்திரா மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் மூன்று முக்கிய நிர்வாகிகள் கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி:

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் தவறு நடந்ததாகக் கூறி, கடந்த 2012ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஒன்பது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட122 தொலைத் தொடர்பு உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆ. ராசா, கனிமொழி உள்பட 17 பேரை பாட்டியலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இவர்களை விடுவித்ததற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது சிபிஐ.

கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் 21ஆம் தேதி, மேல்முறையீட்டு மனு மீதான முதல் விசாரணை நடந்தது. கடந்த 6 ஆண்டுகளில், இந்த வழக்கின் விசாரணை 125 முறை நடந்தது. இறுதியாக, கடந்த 14ஆம் தேதி, இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வழங்கிய தீர்ப்பில், ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget