மேலும் அறிய

10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு மோதல்: சர்வோதயா மாணவர்களை கத்தியால் குத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்!

டெல்லியில் சர்வோதய பள்ளி மாணவர்கள் 4 பேரை அரசுப்பள்ளி மாணவர்கள் 4 பேர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள பல மாநிலங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. டெல்லியிலும் அங்குள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிழக்கு டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் அமைந்துள்ளது அரசு சர்வோதய பால வித்யாலயா பள்ளி. இந்த பள்ளியிலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியில் உள்ள திரிலோக்புரி அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, திரிலோக்புரி அரசுப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருகின்றனர்.


10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு மோதல்:  சர்வோதயா மாணவர்களை கத்தியால் குத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்!

இந்த நிலையில், தேர்வின்போது சர்வோதயா பால வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்களிடம் வம்பிழுத்த மாணவர்களை தாக்குவதற்காக தேர்வு முடிந்த பிறகு, அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியில் காத்திருந்தனர். தேர்வு முடிந்து மாணவர்கள் ஒவ்வொருவராக வெளியேறியபோது, தங்களிடம் வம்பிழுத்த சர்வோதயா பள்ளி மாணவர்களை பார்த்ததும், அவர்களை அரசுப்பள்ளி மாணவர்கள் துரத்த ஆரம்பித்தனர்.

அரசுப்பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களும் கையில் கத்தியுடன் துரத்தியதால், சர்வோதயா பள்ளி மாணவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பயத்தில் அவர்கள் அருகில் இருந்த பூங்காவிற்குள் தப்பிக்க நுழைந்தனர். ஆனால், அங்கும் விடாமல் துரத்திச் சென்ற அரசுப்பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களும், சர்வோதயா பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினர்.


10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு மோதல்:  சர்வோதயா மாணவர்களை கத்தியால் குத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்!

சம்பவ இடத்தில் இருந்த சிலர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்து கிடந்த 4 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இரண்டு மாணவர்களுக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சம்வம் தொடர்பாக பாண்டவ நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் மாணவர்களை கத்தியால் குத்தியது அரசுப்பள்ளி மாணவர்கள்தான் என்பதை உறுதி செய்தனர். காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget