மேலும் அறிய

மதுபான விற்பனை ஊழல் வழக்கு...டெல்லியில் 30 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை..!

டெல்லியில் மதுபான விற்பனை ஊழல் வழக்கு தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் மதுபான விற்பனை ஊழல் வழக்கு தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சிபிஐ சோதனை நடத்திய நிலையில் மதுபானம் விற்க ஒப்பந்தம் பெற்ற வணிகர்களுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தி வருகின்றனர். 

டெல்லி மதுபான விற்பனை கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் பல இடங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) இன்று அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி, டெல்லி, லக்னோ, குருகிராம், சண்டிகர், மும்பை, ஹைதராபாத் மற்றும் வேறு சில இடங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

ஐபிசியின் 120-பி (குற்றச் சதி) மற்றும் 477-ஏ (கணக்குகளை பொய்யாக்குதல்) ஆகியவற்றின் கீழ் சிபிஐயின் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபான வியாபாரிகளுக்கு ரூ.30 கோடி விலக்கு அளிக்கப்பட்டதாகவும், உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த விருப்பப்படி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. 

மேலும், சிசோடியா மற்றும் ஒரு சில மதுபான வியாபாரிகள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மதுபான உரிமம் பெற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை கொடுத்து வழக்கை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அப்போதைய ஆணையர் (கலால்) அர்வா கோபி கிருஷ்ணா, அப்போதைய துணை ஆணையர் (கலால்), மற்றும் உதவி ஆணையர் (கலால்) பங்கஜ் பட்நாகர் ஆகியோர் 2021-22 ஆம் ஆண்டிற்கான மதுபான விற்பனையில் முடிவெடுத்தனர். ஆனால், தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல், உரிமம் பெற்று டெண்டருக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்து எப்ஐஆர் பதியப்பட்டது. 

இதற்கிடையில், ED பணமோசடி தடுப்பு (பிஎம்எல்ஏ) வழக்கை பதிவு செய்துள்ளது மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இன்று விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. கடந்த திங்கட்கிழமை, டெல்லி காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவை அழைத்து, மதுபான விற்பனை மீதான விசாரணையை முடிக்க வேண்டாம் என்றும், தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை முடித்து வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கையில் ”லைசென்ஸ் மற்றும் புதிய மதுபான விற்பனை நிலையங்கள் ஒதுக்கீடு செய்ததில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய டெல்லி காங்கிரஸ், ஜூன் 3ஆம் தேதி அப்போதைய காவல்துறைத் தலைவரிடம் (ராகேஷ் அஸ்தானா) புகார் அளித்துள்ளதாக நாங்கள் ஆணையரிடம் தெரிவித்தோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், கலால் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியாவும் மதுபான ஊழலில் இருந்து வசூலான பணத்தை தங்கள் சொந்த லாபங்களுக்காக பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதலீடு செய்தனர்” என்று தெரிவித்தனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget