மேலும் அறிய

Delhi : "சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப்" பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு..! ஆளுநர் அலுவலகம் முன்பு போராடிய ஆத்மி..

இன்று (அக்.29) மதியம் ஒரு மணியளவில் காற்றின் தரக் குறியீடு 400 முதல் 500 என்ற வரம்புக்குள் பதிவாகி மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

தலைநகர் டெல்லியில் பொதுவாகவே அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பசுமைக் கழிவுகளாலும், காற்றின் திசை மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் காற்று மாசுபாடு அதிகரித்து காற்றின் குறியீட்டுத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீபாவளிப் பட்டாசுகள் காரணமாக காற்று மாசுபாடு மற்றொரு புறம் ஆண்டுதோறும் அதிகரிப்பது வழக்கம்.

கடும் மாசுபாடடைந்த காற்றின் தரம்

ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள்களில் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபாடு குறைந்தது. இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில்  கடந்த அக்டோபர் 24-ந் தேதி பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில்,  தீபாவளிக்கு அடுத்தடுத்த நாள்களில் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக பாதிப்படையத் தொடங்கியது. இன்று (அக்.29) மதியம் ஒரு மணியளவில் காற்றின் தரக் குறியீடு 400 முதல் 500 என்ற வரம்புக்குள் பதிவாகி மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து காற்று மாசுபாடு அளவு மிக மோசமாக உயர்ந்த நிலையில், டெல்லியின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவை எட்டியது. அதன் பின் தற்போது காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.

 

இந்நிலையில் முன்னதாக வெளியான காற்றின் தரம் பற்றிய முன்னறிவிப்பின்படி, குறைந்தது இரண்டு நாள்களுக்கு மிகவும் மோசமான பிரிவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப் பிரச்சாரம்

முன்னதாக, நாட்டின் தலைநகரில் வாகன மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக ‘சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப்’ என்ற பிரச்சாரத்தை நேற்று (அக்.28)  முதல் தொடங்க டெல்லி அரசு திட்டமிட்டிருந்தது. இதனை சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

 2020ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்தப் பிரசாரத்தின் கீழ் டெல்லியில் வாகன மாசுபாட்டைக் குறைக்க, ட்ராஃபிக்கில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும்போது  பச்சை விளக்கு மாறும் வரை தங்கள் வாகனங்களை அணைக்க ஊக்குவிக்கப்படுகிறாா்கள்.

ஆனால் இந்த ஆண்டு டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநர் வேண்டுமென்றே இந்த ஆண்டு தங்களுக்கு ஒப்புதல் அளிக்காததாகவும் மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்களின் படி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் ஆத் ஆத்மி கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகம் முன்பு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காற்றின் தரக் குறியீடு AQI அளவீடு:

0 - 50க்கு இடைப்பட்ட AQI - நல்லது 

51 - 100 - திருப்திகரமானது 

101 - 200 - மிதமானது 

201 - 300 - மோசம்

301 - 400 - மிக மோசம்

401 - 500 - கடுமயான மாசுபாடு

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget