மேலும் அறிய

Congress Poll Rules : எழுந்த கலகக்குரல்...தேர்தல் விதிகளை மாற்றியமைத்த காங்கிரஸ்...

உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூத்த தலைவர்களில் ஒரு பிரிவினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்ய அக்கட்சித் தலைமை ஒப்புக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூத்த தலைவர்களில் ஒரு பிரிவினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்ய அக்கட்சித் தலைமை ஒப்புக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பும் எவர் வேண்டுமானாலும், கட்சியின் 9,000 பிரதிநிதிகள் அடங்கிய பட்டியலைப் பார்க்கலாம் என்றும் இந்த பட்டியல் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

உள்கட்சி தேர்தல் வெளிப்படைத்தன்மையாகவும் நேர்மையாகவும் நடத்தக் கோரி மிஸ்திரிக்கு சசி தரூர், கார்த்தி சிதம்பரம் மற்றும் மணீஷ் திவாரி உள்ளிட்ட ஐந்து எம்பிக்கள் கடிதம் எழுதியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தல், அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு, செப்டம்பர் 24 முதல் 30 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 10 பிரதிநிதிகளின் பெயர்களை மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து எடுத்து கொள்ளலாம் என கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவரான மிஸ்திரி கூறியுள்ளார். வேட்புமனுவில் கையொப்பமிட்டு, தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்ததும், தேர்தலில் வாக்களிக்க போகும் உறுப்பினர்கள் அடங்கிய முழு பட்டியலையும் பெற்றுக் கொள்ளலாம் என எம்பிக்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பத்து ஆதரவாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை யாராவது பெற விரும்பினால், 9000+ பிரதிநிதிகளின் பட்டியல் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் (காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை) டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கிடைக்கும்.

பட்டியலிலிருந்து அவர்களின் 10 ஆதரவாளர்களை (பிரதிநிதிகள்) தேர்வு செய்து, அவர்களின் (பிரதிநிதிகள்) கையொப்பத்தை வேட்பு மனு தாக்கலுக்காக பெற்று கொள்ளலாம். வாக்காளர்களின் பெயர்கள் தெரியாமல் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் செயல்முறை குறித்த அனைவரின் கவலையை இது தீர்க்க வேண்டும். 

வேட்புமனுவில் கையொப்பமிடப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதும், அவர்கள் வாக்காளர்களின் முழு பட்டியலும் அவர்களுக்கு வழங்கப்படும். கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் தேவைகளை இது பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். இன்று என்னை அழைத்து உரையாடியதற்காக சசி தரூருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என மதுசூதன் மிஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget