மேலும் அறிய

"அவர் எப்படி இப்படி பேசலாம்" : மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பறந்த புகார்...பரபரத்த கர்நாடக தேர்தல் களம்..!

கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

கர்நாடகாவில் மே மாதம் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

"மத நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சி"

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், "தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் பொதுக்கூட்டங்களின்போது, உணர்வுகளை தூண்டும் விதமாகவும் பகைமையை ஊக்குவிக்கும் வகையிலும் வெறுப்பை பரப்பும் நோக்கிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

"அமித் ஷாவின் பேச்சு அதிர்ச்சியூட்டும் வகையிலும் இந்திய தேசிய காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விதமாகவும் கூடியிருந்த கூட்டத்தினரிடையே மத நல்லிணக்கச் சூழலை கெடுக்க முயல்வதை நோக்கமாகக் கொண்டது" என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டாக்டர் பரமேஸ்வர், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர், இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

அமித் ஷாவுக்கு எதிராக பறந்த புகார்:

காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரம் ஏற்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் எப்படி இதைச் சொல்ல முடியும்? இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்.

முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், இப்படி வெறுப்பு பேச்சில் ஈடுபடுவது ஒன்றும் முதல்முறை அல்ல. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் தாகூர், பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் வெறுப்பை தூண்டியதாக குற்றச்சாட்டு உள்ளது.

பாஜகவை பொறுத்தவரையில், தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகமாக நம்பியுள்ளது பாஜக. இதன் காரணமாக, தேர்தலுக்கு முன்னதாக 20க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. இவர் மட்டும் இன்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை நட்சத்திர பிரச்சாரகர்களாக பாஜக களம் இறக்கியுள்ளது.

முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைமை கேட்டு கொண்டுள்ளது. அதேபோல, ஆட்சியை பிடிக்க ஊழல் விவகாரத்தையும் இடஒதுக்கீட்டையும் கையில் எடுத்துள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வில் இரண்டு கட்சிகளும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget