மேலும் அறிய

ராமர் கோயில்...காங்கிரஸ் போராட்டம்...நேஷனல் ஹெரால்டு வழக்கு...பாஜகவை சாடிய சிதம்பரம்

கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும் அடக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை அன்று குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றம் செயலிழந்து விட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இந்தியாவில் ஜனநாயகம் மூச்சு விட முடியாமல் திணறி வருவதாகவும், கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும் அடக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை அன்று குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்புவதில் இருந்து அவரைப் பாதுகாக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு வறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த விரிவான நேர்காணலில், வெள்ளிக்கிழமை விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டிய நாளுடன் தொடர்புப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்களையும் சிதம்பரம் நிராகரித்தார்.

போராட்டத்திற்கான தேதி தேர்வுசெய்யப்பட்டபோது ராமர் கோயில் ஆண்டுவிழா குறித்து யோசிக்கவே இல்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும், துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை என்பதால் அனைத்து எம்பிக்களும் வெள்ளிக்கிழமை டெல்லியில் இருப்பார்கள் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டே போராட்ட தேதி தேர்வு செய்யப்பட்டதாகவும் தெளிவுப்படுத்தினார்.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உயர்வு போன்ற பிரச்னைகளுக்காக காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து நடத்திய போராட்டத்தை, கடந்த 2020ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான காங்கிரஸ் கட்சியின் சமாதான அரசியேலே என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய சிதம்பரம், "மேலும், ஆகஸ்ட் 5, 2019 அன்று தான் ஜம்மு காஷ்மீர் சட்ட விரோதமாக துண்டாடப்பட்டது! ஒரு தீவிரமான பிரச்னையை விவாதிக்கும்போது இவற்றை விட்டுவிடுவோம்.

ஆகஸ்ட் 5 அன்று நடந்த போராட்டம், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அக்னிபத் ஆகியவற்றுக்கு மட்டுமே என்று நாங்கள் அறிவித்து தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனால், அந்த அறிவிப்பை பற்றி தெரியாமல் காது கேளாதவர்களாகவும், குருடர்களாகவும் காட்டி கொண்டால், நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்றார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையால் கேள்விக்கு உள்ளாகி வரும் கட்சியின் உயர்மட்ட தலைமையை காப்பாற்றும் முயற்சியாக ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸின் போராட்டம் நடந்ததாக பாஜக தலைவர்களின் குற்றச்சாட்டையும் சிதம்பரம் மறுத்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட தலைவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு வலிமையானவர்கள், அவர்களுக்கு கட்சியின் முழு ஆதரவும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget