மேலும் அறிய

Aadhar Pan Link: ஆதார்கார்டுடன் பான் கார்டை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ந் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

மத்திய அரசு இந்திய குடிமக்களுக்கு வழங்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது. தொழில்புரிவோர் மற்றும் பணிபுரிபவர்களுக்கு முக்கிய ஆவணமாக பான்கார்டு உள்ளது. மத்திய அரசு பான்கார்டு மற்றும் ஆதார்கார்டை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கான அவகாசம் மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது வரும் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


Aadhar Pan Link: ஆதார்கார்டுடன் பான் கார்டை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில், போர்டல் பிஸியாக இருந்தது. இதனால், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், இதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளது.


Aadhar Pan Link: ஆதார்கார்டுடன் பான் கார்டை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

பான் -ஆதார் இணைப்பு

நாடு முழுவதும் தனித்த அடையாள அட்டை நடைமுறையை வழக்கமாக்க ஆதார் எண் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு பான்கார்டு, ஆதார் கார்டு இரண்டையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.2021-ஆம் மார்ச்,31 கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டது. 

கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக பான் - ஆதார் இணைப்பிற்கான கால அவகாசம் இம்மாதம் (மார்ச்) 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் பலரும் பான் - ஆதார் இணைக்க முயற்சி செய்தனர். இதனால் போர்டல் ஸ்லோ டவுன் ஆனது.இதையெடுத்து, பான் - ஆதார்  இணைப்பிற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கிய காலக்கெடுவுக்குள் ஆதார், பான் எண்ணை இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். மேலும், அரசு சார்ந்த பண பரிவர்த்தனைக்கு வங்கிகளில் பான் கார்டை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் அதனால் வரும் சட்ட நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும். எனவே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது மிகவும் அவசியம்.

பான் - ஆதார் எண் இணைப்பதன் அவசியம் என்ன?

வருமானவரித்துறையின் தரவுகளின்படி பல போலியான பான் கார்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தடுப்பதற்கு, வருமானவரித்துறை பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைப்பதை கட்டாயமாக்கியது.  அதன்படி பான்கார்டு உடன் ஆதார் கார்டு இணைக்கபடவில்லை என்றால் அந்த பான் கார்டு செல்லாமல் போகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறை / வங்கி நிர்ணயித்துள்ள ஒரு குறிபிட்ட அளவிற்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு கட்டாயம் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கோடு இணைத்திருக்க வேண்டும். வங்கியில் கணக்கு வைத்திருக்க பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.னவே ஆகவே பான் கார்டு உடன் ஆதாரை இணை வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. 

எப்படி இணைக்க வேண்டும்?

  • ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in-என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
  • அந்த பக்கத்தில் ’Link Aadhaar’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.
  • ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.
  • விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்
  • இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்.

பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என பரிசோதிப்பது எப்படி?

ww.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar -என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
அதில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும் இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், இணைப்பு குறித்த செய்தி வரும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget