மேலும் அறிய

Sabarimala Aravana Payasam: சபரிமலை பக்தர்களே! அரவணை பாயசத்தில் இனி ஏலக்காய்க்கு 'நோ' - திருவிதாங்கூர் தேவசம் போர்ட் அதிரடி

Sabarimala Aravana Payasam: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தயாரிக்கப்படும் அரவண பாயாசத்தில், இனி ஏலக்காய் சேர்க்கப்படாது என திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது.

Sabarimala Aravana Payasam: அரவணை பாயாசத்தில் ஏலக்காய் சேர்ப்பது, பக்தர்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்  என கேரள உயர்நிதிமன்றம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

திருவிதாங்கூர் தேவசம் போர்ட் அறிவிப்பு:

திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பி.எஸ். பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது, “சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தில் இனி ஏலக்காய் சேர்க்கப்படாது. அந்த பாணியில் கடந்த ஓராண்டாக தயாரிக்கப்பட்ட அரவணை பாயாசம் குறித்து எந்த புகாரும் வரவில்லை. இதன் காரணமாக அரவணை பாயசத்தில் இனி ஏலக்காய் சேகரிக்கப்படாது. அத்துடன் சீரகத்திலும், கிருமிநாசினி உள்ளதாக சிலர் புகார் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் தேவைப்பட்டால்  சீரகமும் அரவணை பாயசத்தில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

அரவணை பாயாச பிரச்னை:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அரவண பாயாசம்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றிற்கு 200 பேட்ச் பாயாசம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில், அரிசி, சர்க்கரை, பழம், நெய் ஆகியவை அதிகளவில் சேர்ப்பதோடு, ஏலக்காய் மற்றும் சீரகம் போன்ற பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. சபரிமலை பக்தர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாகும். இந்நிலையில், தான் பாயாசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றதாக இருப்பதோடு, அதில் பூச்சிக் கொல்லிகள் இருப்பதால் ஆபத்து ஏற்படும் என்றும் புகார்கள் எழுந்தன.

ஆய்வு முடிவுகள்:

புகார்களை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பாயாசத்திற்கு பயன்படுத்தப்படும் ஏலக்காயை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்தது. அதுதொடர்பான அறிக்கையின்படி, அந்த ஏலக்காய் மாதிரியில் 14 கொடிய பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏலக்காயில் சில பூச்சிக்கொல்லிகள் இருப்பதாகவும், அவை கடுமையான நோய்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவை என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கைகள் வந்தவுடன், பூச்சிக்கொல்லி கலந்த விதைகள் அடங்கிய பாயாசத்தை விநியோகிக்கக் கூடாது என்று தேவஸ்தான வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவு:

இதுதொடர்பாக வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம்,  ஏலக்காய் சேர்ப்பது மூலம் அரவணை பாயாசத்தை உட்கொள்ளும் பக்தர்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்று கூறியதோடு, அதற்கு காரணமாக அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவை சுட்டிக்காட்டி கடந்த ஜனவரி 12-ந் தேதி எச்சரித்தது. அத்துடன் அதனை பயன்படுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.  ஆனால் அவை உண்ணத்தக்கவை என்று மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அரவணை பாயாசத்தில் ஏலாக்காயை தவிர்த்து வந்த தேவசம் போர்ட், இனி ஏலக்காயை பயன்படுத்தவே போவதில்லை என அறிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget