Breaking Tamil LIVE:மேட்டுப்பாளையத்தில் வாகனப் பேரணி; தேர்தல் நடத்தையை மீறிய எல்.முருகன் மீது வழக்கு பதிவு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நாளை தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் தேசிய, மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் ஆயிரத்து 600-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக இதில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் ஒரு முன்னாள் ஆளுநரும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதனால் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளன.
இப்படி அனல் பறக்கும் தேர்தல் களத்தில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளது தேர்தல் ஆணையம். இதுவரை, பல கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், பரிசுப் பொருட்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவை பறுமுதல் செய்யப்பட்டுள்ளது. நாளை வாக்குப்பதிவு என்பதால் நேற்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. மேலும் நாளை மக்கள் எந்த சிரமமும் இன்றி வாக்குப்பதிவு செய்ய பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க உள்ளார்.
இப்படி பரபரப்பான சூழலில் தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதன்படி இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகப்படியான வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் நாட்டில் நடக்கும் முக்கிய விஷயங்கள் குறித்து உடனுக்குடன் காணலாம்..
13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு!
தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகரில் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும் வாக்குபதிவு இயந்திரங்கள்!
சென்னை முழுவதும் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குபதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படும் பணிகள் தொடங்கியது.
ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்ற பிரதமர் மோடி.. நக்கலாக பதிலளித்த நடிகர் கிஷோர்!
ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்ற பிரதமர் மோடி.. நக்கலாக பதிலளித்த நடிகர் கிஷோர்!#ActorKishore #PMModi https://t.co/3bTvHXiRtE
— ABP Nadu (@abpnadu) April 18, 2024
மதுரை - திண்டுக்கல் - திருச்சி வழியே அதிவேக மீட்டர் காக் ரயில்கள் இயக்கப்பட்ட தருணம்.. தென்னக ரயில்வே பகிர்ந்த எக்ஸ் பதிவு
#ThrowbackThursdays
— Southern Railway (@GMSRailway) April 18, 2024
Throwback to the era of high-speed special metre gauge trains on the Southern Railway's Madurai-Dindugal-Trichy Section! 🚂 #MetreGaugeMemories #SouthernRailway #RailwayHistory pic.twitter.com/jqVUHZMnC2
Voting Day Statistics : நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரதா சாஹு
நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக வரும் 85+ வயது முதியோருக்கு பேருந்து வசதி இலவசம். பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வழிகாட்டலுக்கு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆவணங்களைக் காட்டி வாக்குப்பதிவு செய்யலாம். - சத்யபிரதா சாஹு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets