Breaking Tamil LIVE: இன்னும் சற்று நேரத்தில் முடிவுக்கு வரும் அரசியல் கட்சிகள் பரப்புரை!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடே மிகவும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருக்கும் 40 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. அனல் பறக்கும் தேர்தல் களத்தில் கட்சி தலைவர்கள் இன்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்த வரையில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர்கள் அனைவரும் நூதன முறையில் பஜ்ஜி சுடுவது, தோசை சுடுவது, ஆட்டோ ஓட்டுவது என வாக்கு சேகரித்து வந்தனர். வீடு வீடாக மக்களுடன் மக்களாக சென்று வாக்கு சேகரித்தனர். மேலும், இன்று கடைசி நாள் என்பதால், தேர்தல் பரப்புரை முடிந்ததும் மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் எக்காரணத்தை கொண்டும் பரப்புரை செய்யவோ, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியிலோ ஈடுபட அனுமதி இல்லை என்றும், இந்த பணிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மக்களின் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7,184 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 3,080 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் முடிவுக்கு வரும் அரசியல் கட்சிகள் பரப்புரை!
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுவதால் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி தலைமையில் வாகன பேரணி
விழுப்புரத்தில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமைச்சர் பொன்முடி தலைமையில் வாகன பேரணி செய்து வருகின்றனர்.
அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Lok Sabha Elections 2024: வெற்றி பெற்றால் 1200 மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுப்பேன் - பாரிவேந்தர்
பெரம்பலூர் தொகுதியில் தான் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், 1200 மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்பேன் என பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நியமனம் - அண்ணா பல்கலைக் கழகம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!
அண்ணா பல்கலைக் கழக பதிவாளராக பிரகாஷ் நியமிக்கப்பட்டது தொடர்பாக, உயர்கல்விதுறையும் பலகலைக் கழகமும் பதில் அளிக்கவேண்டும் எனவும், சிண்டிகெட் கூட்ட வீடியோக்களை பத்திரப்படுத்தவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets