மேலும் அறிய
Breaking News LIVE: பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
Breaking News LIVE 10th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதற்கான தனித் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
- டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அ.தி.மு.க. செய்த துரோகத்திற்கு நாடாளுமன்ற ஆவணமே சாட்சி – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதலமைச்சர் கீழ்த்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடு
- ராஜஸ்தானில் 150 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன் – 5 வயது சிறுவனை மீட்கும் பணியில் தீவிர நடவடிக்கை
- வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைவதில் நீடிக்கும் தாமதம் – நகராமல் அதே இடத்தில் நிற்பதால் தொடர்ந்து கண்காணிப்பு
- தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
- ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நடப்பு மக்களவை கூட்டத்தொடரிலே அறிமுகப்படுத்த அரசு தீவிரம்
- ராகுல்காந்தி தொடர்ந்து பொய் பிரச்சாரம்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- நாடாளுமன்றம் செயல்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை – காங்கிரஸ் குற்றச்சாட்டு
- மேற்கு வங்க ஆளுநருடன் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு
- நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கருத்துப்படியே இந்தியா இயங்கும் – அலகாபாத் நீதிமன்ற நீதிபதி பேச்சால் சர்ச்சை
- தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிதி வழங்கவில்லை – மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
- ஊதிய விவகாரம்; ஒடிசாவில் கடும் குளிரில் நள்ளிரவில் பெண்கள் போராட்டம்
- ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா நாளை பதவியேற்பு
13:57 PM (IST) • 10 Dec 2024
பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
பிரசவத்தின்போது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், தாயும் கவலைக்கிடமாக இருப்பதால் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
13:52 PM (IST) • 10 Dec 2024
அதானி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
அதானி விவாகரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















