மேலும் அறிய

Redfort Blast: பயம், முடிக்கப்படாத வேலை.. தற்கொலைப்படை தாக்குதல்? டெல்லியில் கார் வெடிப்பு அப்டேட்ஸ்

Delhi Redfort Blast: செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு பயத்தின் வெளிப்பாடாக நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Delhi Redfort Blast: வெடிமருந்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, எதிர்பாராதவிதமாக வெடித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

டெல்லி கார் வெடிப்பு:

தலைநகர் டெல்லியில் நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு மிக்க ஒரு இடத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இந்நிலையில் உளவுத்துறை தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, சந்தேகிக்கப்படும் நபர்கள் அச்சம் கொண்டிருக்கலாம் எனவும், இதனால் வெடிபொருட்களை கொண்டு செல்லும் போது ஏதேனும் தவறு நேர்ந்து வெடித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 2,900 கிலோ ரசாயனம் மீட்கப்பட்டது ஆகியவை சந்தேக நபர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், இதனால் கார் வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

தற்கொலைப்படை தாக்குதல் அல்ல?

வெளியாகியுள்ள தகவல்கள் வழக்கு விசாரணையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். காரணம், ஆரம்பத்தில் இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்ற கோணத்திலேயே விசாரணை முடுக்கிவிடப்பட்டது. ஆனால், இந்த தகவல்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வெடிபொருட்களை கொண்டு செல்லும்போது எதிர்பாராமல் வெடித்த சம்பவமாக வழக்கை மாற்றுகிறது என்று புலனாய்வுத்துறை தரப்பினர் குறிப்பிடுகின்றனர். சந்தேகிக்கப்படும் நபர் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை (IED) தவறான முறையில் ஒன்று சேர்த்ததாகவும்,  இதன் காரணமாக வெடிபொருள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பெரும் சேதம் இல்லாதது ஏன்?

குண்டு வெடித்தால் ஏற்படக்கூடிய குழி இல்லாததும், எரிபொருட்கள் ஏதும் இல்லாததும், வாகனத்தில் வெடிபொருளை கொண்டு செல்லும்போது தற்செயலாக நடந்த வெடிப்பாகவே இந்த சம்பவத்தை உணர்த்துகிறது. சந்தேக நபர்கள் பீதியில் இருந்ததால் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில் IED-ஐ ஆயுதமாக்க முடியவில்லை என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். i20 கார் வெடித்தபோது போக்குவரத்தில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது வாகனம் இயக்கத்தில் இருந்ததால் IED ஏதாவது பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் தற்செயலான வெடிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. அதன்படி, சந்தேக நபர்கள் வெடிபொருட்களை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது அகற்றவோ முயன்றபோது வெடிப்பு நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதை நிராகரிக்கமுடியவில்லை.

பரவிய அச்சம்

வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை ஓட்டி வந்த முக்கிய சந்தேக நபர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பு நடந்த நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அவர் தனது தொலைபேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார், அவரது குடும்பத்தினருடனான தொடர்புகளையும் கூட துண்டித்துவிட்டார். திங்கட்கிழமைக்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள் உட்பட மற்ற சந்தேக நபர்களும் மருத்துவர்கள் ஆவர்.  மருத்துவர்கள் எளிதில் சந்தேகத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்பதால், அவர்களின் உண்மையான செயல்பாடுகளை மறைக்க அதனை ஒரு முகமூடியாக பயன்படுத்தியுள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget