மேலும் அறிய

‛திருக்குறளில் ஒளவையார் சொன்னது...’ மேடையில் தெறிக்கவிட்ட பாஜக எம்எல்ஏ!

ஒளவையார் கூட திருக்குறளில் சொல்வாங்க.. என்று புதுச்சேரியில் சட்ட தின விழா மேடையில் பேசிய பாஜக எம்எல்ஏ அசோக்பாபு அரங்கிலிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்தார்.

ஒளவையார் கூட திருக்குறளில் சொல்வாங்க.. என்று புதுச்சேரியில் சட்ட தின விழா மேடையில் பேசிய பாஜக எம்எல்ஏ அசோக்பாபு அரங்கிலிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்தார்.

அரசியல் என்றால் பேச்சு. தலைவன் என்றால் வீர உரை. இதுதான் அடையாளம். ஆனால், இன்றைய அரசியல் அப்படியிருக்கிறதா என்றால் இல்லை. மேடையேறி சரளமாகப் பேசும் தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் சூழல் தான் இருக்கின்றது. தமிழகம், புதுச்சேரி என எங்கும் இதற்கு விதிவிலக்கல்ல.
அதை நிரூபித்திருக்கிறார் பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபு.

விழாவில் அவர் பேசுகையில், "மத்தியில் ஆளும் பிரதமரும், புதுச்சேரி முதல்வரும் ஞானிகள்.  இருவருமே தீர்க்கதரிசிகள். இருவருக்குமே நாடு நல்லா இருக்கணும். மக்கள் நல்லா இருக்கணும். இதைத் தவிர வேறு தெரியாது. இதைத் தான் ஒளவையார் கூட திருக்குறளில் சொல்வார்கள்" என்று குறிப்பிட்டார். 

அவ்வளவுதான் அரங்கமே வெடித்துச் சிரித்தது. ஒளவையார் எழுதியது ஆத்திசூடி என்று அரங்கில் இருந்தவர்கள் எடுத்துக் கொடுத்தனர். 

சற்றே சுதாரித்துக் கொண்ட எம்எல்ஏ, "ஒளவையார் எழுதியது ஆத்திசூடி என்பது தெரியும். ஒளவையார் சொன்னது வேறு. நான் சொல்ல வந்தது வேறு. நான் சொல்வதை முழுசா கேட்டால் சரியாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். இதுதான் சமாளிப்பா என்று நினைத்த மக்கள் மீண்டும் அரங்கத்தில் சிரிப்பலையைப் பாய்ச்சினர்.

ஒரு மாநிலத்தின் சட்டத்தை உருவாக்கும் சட்டமன்ற உறுப்பினர், அதுவும் சட்ட நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவ்வையார் திருக்குறள்ல சொல்வாங்க என பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

 

கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழார்!

இப்படித்தான் ஆப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசியபோது, கம்பராமாயணத்தை தந்த சேக்கிழார் என்று கூறி ஒரு பெருங்கூட்டத்தையே அதிர வைத்தார். கம்பராமாயணத்தை எழுதியது கம்பர் என்பது பள்ளிக் குழந்தையும் கூட சொல்லும் சேதி. சேக்கிழார் எழுதியது பெரிய புராணம் ஆகும். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சை சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றில் வேகமாகப் பரவி அப்போது நெட்டுலகை அதிர வைத்தது.

இன்னும் பலரும் பலவிதமாகப் பேசி சிரிப்பூட்டிய நிகழ்வுகளும் உண்டு. ஒருமுறை அப்போதைய அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், நேற்றுக்கூட முதல்வர் எடப்பாடி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துவிட்டு வந்தார் என்று கூறினார். ஒரு நாட்டின் பிரதமரைக் கூட மறந்து பேசிய சம்பவம் மீம் க்ரியேட்டர்ஸுக்கு கொண்டாட்டமானது.

இதேபோல், திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற தொடக்கத்தில் அவர் மேடைகளில் தாளில் எழுதிவைத்துப் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget