மேலும் அறிய

Bihar Stampede: மீண்டும் ஒரு கூட்ட நெரிசல் - 8 பெண் பக்தர்கள் மூச்சு திணறி பலி, நாலந்தா கோயிலில் நேர்ந்த சோகம்

Bihar Stampede News: பீகார் மாநிலம் நாலந்தாவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பெண் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Stampede: நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீதல மாதா கோயிலில் நடந்த மதக்கூட்டத்தின் போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் - 8 பெண் பக்தர்கள் பலி

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீதல மாதா கோயிலில் மதவழிபாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 8 பெண் பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் அதிகளவில் பக்தர்கள் கூடியதால், வழிபாட்டின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழப்பமான சூழல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு பணிகளை தொடங்கினர். சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும் அரசும் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாலந்தா கோயிலில் நடந்தது என்ன?

செவ்வாய்கிழமை நாட்களில் வழக்கமாகவே இந்த கோயிலில் அதிகப்படியான கூட்டம் குவியுமாம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக பாட்னாவில் இருந்து கூட பலரும் வந்து இந்த ஆலயத்தில் வழிபட்டு செல்வார்களாம். அந்த வகையில் இன்று காலையில் கூடிய கூட்டத்தை நிர்வகிக்க சரியான நடவடிக்கைகள் எடுக்காததே இன்றைய விபத்திற்கு காரணம் என சிலர் தெரிவிக்கின்றனர். அதேநேரம், கூடியிருந்தவர்கள் யாரும் வரிசையில் செல்லவில்லை எனவும், விரைந்து சாமி தரிசனம் செய்து விட வேண்டும் என முண்டியடித்ததே காரணம் என்றும் விபத்தின் போது அங்கிருந்த சிலர் தெரிவிக்கின்றனர். வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் சைத்ர நவரத்திரியின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று அதிகளவில் பக்தர்கள் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரங்கல் தெரிவித்து இழப்பீடு அறிவித்த அரசு

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் மற்றும் முதலமைச்சர் நிவாரண பிரிவில் இருந்து 2 லட்சம் ரூபாய் என, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார். இதுபோக, பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக அறிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
Embed widget