மேலும் அறிய

தேங்கும் மழைநீர்! முன்னறிவிப்பின்றி கட்டடங்களை இடிக்க அரசு அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் மக்கள்!

Bengaluru Rains: மழைநீர் வெள்ளத்தால் நகரமே ஸ்தம்பித்துள்ள சூழலில், மழைநீர் வடிகால்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் அதிரடியாக இடிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Bengaluru Rains: கர்நாடகாவில் மழைநீர் வெள்ளம் வெளியேற இடையூறாக இருக்கும் வீடுகள் மற்றும் கட்டடங்களை தயவு தாட்சண்யமின்றி இடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்களுக்கு விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. 

இதனையடுத்து பெங்களூருவின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெளியேற வழியின்றி வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை இந்த வெள்ளம் சூழ்ந்த நிலையில், ரப்பர் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகரின் பல முக்கிய சாலைகளில் நீர்தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது வரை நகரின் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

 

முன்னதாக ஏரிகள் நிரம்பி மழைநீர் வெள்ளத்தில் மீன்கள் சாலைகளுக்கு அடித்து வரப்பட்டன. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் பெங்களூரு மாநகராட்சியை கடுமையாக விமர்சித்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்தும் வருகின்றனர்.

 

பெங்களூரு நகரின் பல பகுதிகளும் கடந்த 2 நாள்களாக மழைநீர் வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ள இந்த இக்கட்டான சூழலில், மழைநீர் வடிகால்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் அதிரடியாக இடிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கர்நாடக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த இடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னதாகப் பேசியுள்ள அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், வெள்ள நீர் வெளியேற சொத்துக்கள் தயவுதாட்சண்யமின்றி இடிக்கப்படும். இது கர்நாடக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தெளிவாக உள்ளது. நாங்கள் யாருக்கும் சம்மன் அளிக்க வேண்டியதில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் மாநகராட்சி இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கும். பணியாளர்களை எந்த தொலைபேசி அழைப்புகளையும் ஏற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். அரசின் இந்த அதிரடி உத்தரவால் பொதுமக்கள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். வசிக்கும் வீட்டுக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்று  அச்சத்தில் உள்ளனர்

பெங்களூருவின், சரஜ்புரா பகுதியில் கட்டப்பட்டுள்ள வீட்டுமனை குடியிருப்பு பகுதிகளில் முன்னதாக வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், அப்பகுதியில் மழைநீர் வடிகால்களில் மீது கட்டப்பட்டுள்ள ரெயின்போ டிரைவ் லே-அவுட்டைச் சேர்ந்த 20 வீடுகள் மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பகுதியில் உள்ளசன்னிபுருக்ஸ் லே அவுட்டிலும் மழைநீர் புகுந்தது. இதனால் இந்த லே-அவுட்களில் வசித்து வந்த மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

இந்த வெள்ளப் பெருக்கு, மழைநீர் தேக்கம் குறித்த உயர்மட்டக் கூட்டத்துக்குப் பிறகு நகரில் புதிய வாய்க்கால்களுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget