மேலும் அறிய

மிதக்கும் பெங்களூரு...களமிறக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை... வெள்ளத்திற்கு காரணம் என்ன?

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகமும் பெங்களூரில் பெய்த வரலாறு காணாத மழையுமே வெள்ளத்திற்கு காரணம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று குற்றம் சாட்டி உள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகமும் பெங்களூரில் பெய்த வரலாறு காணாத மழையுமே வெள்ளத்திற்கு காரணம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று குற்றம் சாட்டி உள்ளார்.

எல்லா பிரச்னைகளையும் தாண்டி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதை தனது அரசு ஒரு சவாலாக எடுத்துக்கொண்டது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

மாநில தலைநகரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கி, வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நாங்கள் பல ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். அவற்றை தொடர்ந்து அகற்றுவோம். அவற்றை சிறப்பாக நிர்வகிக்கும் வகையில், தொட்டிகளுக்கு மதகுகள் அமைத்து வருகிறோம். கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். 

பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரை எடுக்க தொடங்கியுள்ளோம். ஓரிரு பகுதிகளைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் நீர் வற்றிப் போய்விட்டன" என்றார்.

பெங்களூரில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளன. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பெங்களூரு துணை படைத்தளபதி ஜே செந்தில் குமார், “நாங்கள் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை அனுப்பியுள்ளோம். மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த குழுவினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களை வெளியேற்ற பெங்களூரு மாநகராட்சி டிராக்டர்களையும் பயன்படுத்தி வருகிறது" என்றார்.

செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமை வரை கர்நாடகாவில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் பெங்களூரு, கடலோர கர்நாடகாவின் மூன்று மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5 முதல் 9 வரை குடகு, ஷிவமொக்கா, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒரு மாதமாக இடைவிடாத மழை பெய்து வருகிறது.

இந்த அளவுக்கு மழை பெய்திருந்தால் பெங்களூரு நகரின் நிலையே நியூயார்க்கிலும் ஏற்பட்டிருக்கும் என கர்நாடக அமைச்சர் கே சுதாகர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகரமாக கருதப்படும் பெங்களூரில் மோசமான உள்கட்டமைப்பின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக இன்ஃபோசிஸின் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பாய் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கிண்டல் செய்யும் விதமாக பதில் அளித்துள்ள அமைச்சர், "ஒரு சிக்கலைத் தீர்ப்பதை விட புகார் செய்வது எளிது. நியூயார்க்கில் இவ்வளவு மழை பெய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நூற்றுக்கணக்கான கிராமங்கள் வளர்ச்சியடையாமல் பெரிய பெங்களூரில் இணைக்கப்பட்டது யாருடைய தவறு” என அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget