மேலும் அறிய

மிதக்கும் பெங்களூரு...களமிறக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை... வெள்ளத்திற்கு காரணம் என்ன?

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகமும் பெங்களூரில் பெய்த வரலாறு காணாத மழையுமே வெள்ளத்திற்கு காரணம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று குற்றம் சாட்டி உள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகமும் பெங்களூரில் பெய்த வரலாறு காணாத மழையுமே வெள்ளத்திற்கு காரணம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று குற்றம் சாட்டி உள்ளார்.

எல்லா பிரச்னைகளையும் தாண்டி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதை தனது அரசு ஒரு சவாலாக எடுத்துக்கொண்டது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

மாநில தலைநகரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கி, வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நாங்கள் பல ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். அவற்றை தொடர்ந்து அகற்றுவோம். அவற்றை சிறப்பாக நிர்வகிக்கும் வகையில், தொட்டிகளுக்கு மதகுகள் அமைத்து வருகிறோம். கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். 

பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரை எடுக்க தொடங்கியுள்ளோம். ஓரிரு பகுதிகளைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் நீர் வற்றிப் போய்விட்டன" என்றார்.

பெங்களூரில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளன. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பெங்களூரு துணை படைத்தளபதி ஜே செந்தில் குமார், “நாங்கள் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை அனுப்பியுள்ளோம். மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த குழுவினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களை வெளியேற்ற பெங்களூரு மாநகராட்சி டிராக்டர்களையும் பயன்படுத்தி வருகிறது" என்றார்.

செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமை வரை கர்நாடகாவில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் பெங்களூரு, கடலோர கர்நாடகாவின் மூன்று மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5 முதல் 9 வரை குடகு, ஷிவமொக்கா, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒரு மாதமாக இடைவிடாத மழை பெய்து வருகிறது.

இந்த அளவுக்கு மழை பெய்திருந்தால் பெங்களூரு நகரின் நிலையே நியூயார்க்கிலும் ஏற்பட்டிருக்கும் என கர்நாடக அமைச்சர் கே சுதாகர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகரமாக கருதப்படும் பெங்களூரில் மோசமான உள்கட்டமைப்பின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக இன்ஃபோசிஸின் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பாய் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கிண்டல் செய்யும் விதமாக பதில் அளித்துள்ள அமைச்சர், "ஒரு சிக்கலைத் தீர்ப்பதை விட புகார் செய்வது எளிது. நியூயார்க்கில் இவ்வளவு மழை பெய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நூற்றுக்கணக்கான கிராமங்கள் வளர்ச்சியடையாமல் பெரிய பெங்களூரில் இணைக்கப்பட்டது யாருடைய தவறு” என அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Embed widget