மேலும் அறிய

"மம்தா, பினராயி விஜயன் அரசுகள் கவிழ்க்கப்படும்" மீண்டும் புயலை கிளப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்!

மக்களவைத் தேர்தலில் தோற்கும் மாநிலங்களில் முதலமைச்சர்களை பாஜக கைது செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இடைக்கால பிணையில் வெளியே வந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

புயலை கிளப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்:

டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து தான் விலகினால், அடுத்ததாக மம்தா, பினராயி விஜயன் அரசுகள் கவிழ்க்கப்படும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை பாஜக டார்கெட் செய்வதாக கூறுவதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த கெஜ்ரிவால், "ஆம் ஆத்மி கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியே காரணம். பிரதமரை சந்திக்கும் பலர், அவர்களில் சிலர் எங்களின் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி பற்றி தங்களிடம் பிரதமர் அடிக்கடி பேசுவதாக அவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். எதிர்காலத்தில் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவிலும் பல மாநிலங்களிலும் தங்களுக்கு சவால் விடும் என பிரதமர் கூறியதாக அவர்கள் கூறினார்கள். 

எனவே, எங்களை மொட்டுக்களாக இருக்கும்போதே நசுக்க விரும்புகிறார்கள். வளரும் முன் ஆம் ஆத்மியை நசுக்க விரும்புகிறார்கள். சமீப நாள்களாக, ‘ஆபரேஷன் ஜாது’வை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக அவர்கள் ஆம் ஆத்மி தலைவர்களை கைது செய்கிறார்கள்.

"தோற்கும் இடங்களில் முதலமைச்சர்களை கைது செய்யும்":

தேர்தலுக்குப் பிறகு எங்களின் வங்கி கணக்குகளை முடக்குவோம் என்று ராஜு (கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ் வி ராஜு) அறிக்கை அளித்துள்ளார். எங்கள் அலுவலகத்தை காலி செய்வதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

ஆனால், ஆம் ஆத்மி கட்சி நான்கு பேர் கொண்ட கட்சி இல்லை என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இது இப்போது நாடு முழுவதும் பரவி வரும் சிந்தனை. கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் நாம் செய்திருக்கும் பணியை, இதுவரை யாரும் பார்த்ததில்லை.

பஞ்சாபில் ஏன் வென்றோம்? ஏனென்றால் டெல்லியில் எங்கள் பணி அங்கு எதிரொலித்தது. குஜராத் மக்கள் எங்களுக்கு ஏன் வாக்களித்தனர்? பஞ்சாப்பிலும் டெல்லியிலும் நாங்கள் செய்த வேலை குஜராத்தில் எதிரொலித்தது.

ஜனநாயகத்திற்கு ஆபத்து:

தொடர்ந்து பேசிய அவர், "டெல்லியில் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாது என்பதை அவர்கள் (பிஜேபி) புரிந்துகொள்கிறார்கள். ஒரு தேர்தலில் 67 இடங்கள் கிடைத்தன. மற்றொரு சந்தர்ப்பத்தில் 62 இடங்கள் கிடைத்தன.

எனவே, அவர்கள் கெஜ்ரிவாலை ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கிறார்கள். அதனால், கெஜ்ரிவால் ராஜினாமா செய்து அவரது ஆட்சியை கவிழ்க்க முடியும் என நம்புகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. இன்று நான் பதவி விலகினால் நாளை மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆட்சியை கவிழ்ப்பார்கள்.

பா.ஜ.க. எங்கு தோற்றாலும் முதலமைச்சரை கைது செய்து அவரது ஆட்சியை கவிழ்க்கலாம். இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தை சிறையில் அடைத்தால், ஜனநாயகம் சிறையிலிருந்து இயங்கும்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget