மேலும் அறிய

Arvind Kejriwal: ஆட்டம் கண்ட டெல்லி.. ஜெயிலுக்கு போன முதல்வர்.. மதுபான கொள்கை வழக்கு கடந்து வந்த பாதை!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் 21 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் 21 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் இதில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கில் தீர்ப்பை கேட்டு நீதிமன்ற வளாகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கதறி அழுதார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டு வர மோடியும் அமித்ஷாவும் சதித் திட்டம் தீட்டினர். இந்த வழக்கில் நாங்கள் நேர்மையானவர்கள் என நீதிமன்றம் கூறியுள்ளது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

மதுபான கொள்கை வழக்கு கடந்து வந்த பாதை

வருவாயை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டும், சில்லறை விற்பனையை தனியார்மயமாக்குதல் இலக்காக கொண்டு டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் டெல்லி 32 ண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் 2022ம் ஆண்டு அந்த திட்டத்தை டெல்லி மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம் சாட்டினார். தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கும் ஆளுநர் உத்தரவிட்டார். இதனையடுத்து அப்போதைய துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. 

 தொடர்ந்து அனைவரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இதனடிப்படையில் புதிய மதுபான கொள்கையில் பண மோசடி நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து 2023ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மார்ச் 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய,ஆட்சியை தக்க வைக்க அதிஷி மர்லினா முதலமைச்சராக பதவியேற்றார். 

தொடர்ந்து 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ச்சியாக அந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்றது. தற்போது இந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யபட்டனர். 

தலைப்பு செய்திகள்

இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget