மேலும் அறிய

சமஸ்கிருதத்தில் திணறிய மாணவர்கள்; சரமாரியாக தாக்கிய தலைமை ஆசிரியர் - நடந்தது இதுதான்!

கடவுள் வாழ்த்து பாடல்களை சரியாக பாடாததாலும், சமஸ்கிருத மொழியில் சரி வர மதிப்பெண்களை எடுக்காததாலும் தலைமை ஆசிரியர் மாணவர்களை சரமாரியாக அடித்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் பக்கே கெசாங் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடல்களை சரியாக பாடாததாலும், சமஸ்கிருத மொழியில் சரி வர மதிப்பெண்களை எடுக்காததாலும் தலைமை ஆசிரியர், மாணவர்களை சரமாரியாக அடித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேச பள்ளியில் நடந்தது என்ன?

இந்த பள்ளியை பதஞ்சலி யோக்பீத் அறக்கட்டளை நடத்தி வருகிறது. மாணவர்களை தாக்கியதாக தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்த நிலையில், தலைமை ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் தங்கியிருந்த அந்த பள்ளியின் தமைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பக்கே கேசாங்கின் காவல் கண்காணிப்பாளர் (SP) தாசி தரங் கூறுகையில், "1ஆம் வகுப்பு மாணவனின் உடலில் காயங்கள் இருந்ததை பெற்றோர் கவனித்துள்ளனர். இதையடுத்துதான், மாணவர்களை தலைமை ஆசிரியர் தாக்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டிசம்பர் 10ஆம் தேதி செய்ஜோசா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

குழந்தைகளை தாக்கிய பள்ளி முதல்வர்:

காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 342, 323 மற்றும் சிறார் நீதிச் சட்டப் பிரிவு 75இன் கீழ் குழந்தைகளுக்கு கொடுமை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை பயிலும் 20 மாணவர்கள் பள்ளி முதல்வரால் தாக்கப்பட்டார்.

தாக்கப்பட்டது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாணவர்களை அவர் மிரட்டியுள்ளார். பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடல்களை சரியாக பாடாததற்காக மாணவர்களை தலைமை ஆசிரியர் துன்புறுத்தியுள்ளார். சமஸ்கிருத மொழியில் சரி வர மதிப்பெண்கள் எடுக்காததால் சில மாணவர்கள் தாக்கப்பட்டனர்" என்றார்.

குறிப்பிட்ட இந்த பள்ளி, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யாமல் நடத்தப்பட்டு வருகிறது என அருணாச்சல பிரதேச மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.                                                                                                                            

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget