மேலும் அறிய

எல்லையில் ஊடுருவக் காத்திருக்கும் 140 தீவிரவாதிகள்: எச்சரிக்கும் இந்திய ராணுவம் !

இந்திய எல்லையில் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவத் தளத்தில்140 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய எல்லையில் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவத் தளத்தில்140 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த  140 தீவிரவாதிகளும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (LoC) போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஊடுருவத் தயார் நிலையில்காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003-ம்ஆண்டில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகுபல்வேறு கால கட்டங்களில் சண்டை நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் ஒப்பந்தம், உடன்பாடுகளை பாகிஸ்தான் மதிக்கவில்லை. காஷ்மீர் எல்லையில் அந்த நாட்டு ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது.

கடந்த 2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக அதே ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன. இதனால் எல்லையில் போர் பதற்றம் உருவானது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி (2021) இறுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி சண்டை நிறுத்தம் தொடர்பாக இதுவரை மேற்கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் உறுதியுடன் கடைபிடிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. 
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் 140 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.



எல்லையில் ஊடுருவக் காத்திருக்கும் 140 தீவிரவாதிகள்: எச்சரிக்கும் இந்திய ராணுவம் !

இது குறித்து இந்திய ராணுவத் தரப்பில், "பாகிஸ்தானின் ஏவுதளத்தில் இந்திய எல்லைக்குள் எந்நேரமும் ஊடுருவ ஆயத்தநிலையில் 140 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக அவர்கள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சி அனைத்தையும் வீரர்கள் சாமர்த்தியமாக முறியடித்தனர். எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ள நிலையில் பாகிஸ்தானோ எல்லையை ஒட்டி கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை அத்தகைய கட்டுமானங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். ஆனால், அவர்களோ அதற்குப் பதிலடியாக இந்திய எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து சேதத்தை விளைவித்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதன் பின்னர், காஷ்மீர் மண்ணிலிருந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகள் பயந்தோடிவிட்டனர்.

உள்ளூர்வாசிகளை மூளைச் சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளை மாற்றுவதைத் தடுக்க ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தீவிரவாதிகளின் மூளைச்சலவைக்கு ஆளாக வாய்ப்புள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிலைமையை புரியவைத்து சீர்படுத்துகிறோம். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இதுவரை நிறைய பேரை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள இச்செய்தி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget