மேலும் அறிய

Chandrababu Naidu Arrest: ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு என்ன வழக்கில் எதனால் கைது..? முழு விவரம் உள்ளே!

ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்தது.

ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்தது. ஆந்திராவை அடுத்த நந்தியாலா நகரிலுள்ள ஞானபுரத்தில் உள்ள ஆர்கே ஃபங்ஷன் ஹாலில் இருந்து காலை 6 மணியளவில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தபோது நந்தியால் ரேஞ்ச் டிஐஜி ரகுராமி ரெட்டி மற்றும் சிஐடி தலைமையில் பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது கைதின்போது சந்திரபாபு, “ ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது... நான் தவறு செய்தால் அதை நிரூபிக்க வேண்டும். இறுதியில், நீதி வெல்லும். மக்களும், தெலுங்கு தேசத்தினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

என்ன வழக்கில் எதனால் கைது..?

கடந்த தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக் காலத்தில், அதாவது 2016 முதல் 2019 வரை, ஆந்திர அரசின் பொதுப் பணம் ரூ.118 கோடி போலி ஒப்பந்தங்கள் வடிவில் கை மாறியதாக தெலுங்கு தேசம் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு பிஏ ஸ்ரீனிவாஸ் மூலம், ஷபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனத்தின் பிரதிநிதி மனோஜ் வாசுதேவ், துணை ஒப்பந்ததாரராக ஆள்மாறாட்டம் செய்து, இந்தப் பணத்தை அவர்களது கணக்குகளில் செலுத்தியதாக குற்றச்சாட்டுகள் வந்தன. இந்த ஊழல் அம்பலமானது தொடர்பாக பதிலளித்த ஐடி அதிகாரிகள், சந்திரபாபுவுடன் ஸ்ரீனிவாஸ், மனோஜ் வாசுதேவ், யோகேஷ் குப்தா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

கடந்த வாரம் அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. போலி ஒப்பந்தங்கள் மற்றும் பணி ஆணைகள் மூலம் ஒப்பந்தங்கள் கை மாறியதை மனோஜ் வாசுதேவ் ஒப்புக்கொண்டதாக தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் தெரிவித்தனர். 2016 மற்றும் 2019 க்கு இடையில் எத்தனை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன? அதற்கான பணம் எப்படி கிடைத்தது? பணம் எப்படி கை மாறியது என்பது தொடர்பான அறிக்கை கொடுக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தப்பட்டது. இந்த வரிசையில் மனோஜ், ஸ்ரீனிவாஸ் வெளிநாடு தப்பிச் சென்றதை அடுத்து ஐடி அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐடி நோட்டீஸ் அடிப்படையில் ஆந்திர சிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

திறன் பயிற்சியில் ஊழலா..? 

ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு ஊழல் (APSSDS) வழக்கில் சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஊழலில், பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஏபிஎஸ்எஸ்டிசி 2016 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், வேலையில்லாத இளைஞர்களுக்கு, அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.

ஆந்திரப் பிரதேச CED பதிவு செய்த FIR அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகமும் (ED) விசாரணை நடத்தி வருகிறது. M/s DTSPL, அதன் இயக்குநர்கள் மற்றும் பலர் ஷெல் நிறுவனங்களின் உதவியுடன் பல நிலை பரிவர்த்தனைகளை மேற்கொண்டு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், ரூ. 370 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget