மேலும் அறிய

உள்ளே விட மறுத்த போலீஸ்! சுவர் ஏறி குதித்த அகிலேஷ் யாதவ் - முன்னாள் முதலமைச்சருக்கு நடந்தது என்ன?

சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அகிலேஷ் யாதவ், சுவரை ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரரும் சோசலிச தலைவருமான ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான பங்காற்றியவர். குறிப்பாக, கடந்த 1970களில் எமர்ஜென்சி காலத்தில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, ஜனதா கட்சியை வெற்றி பெற செய்தார். கடந்த 1979ஆம் ஆண்டு, இவர், இயற்கை எய்தினார்.

ஜெயபிரகாஷ் நாராயணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் வரை பலரும் அவருக்கு இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் பரபரப்பு:

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் மரியாதை செலுத்துவதற்காக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், அங்கு சென்றிருந்தார். ஆனால், மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அகிலேஷ் யாதவ், மையத்தின் சுவரை ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சி செய்தார். ஆனால், வளாகத்திற்குள் நுழையவிடாமல் போலீசார் தடுக்க முயன்றபோது அங்கு குழப்பம் நிலவியது. கூட்டத்தை கலைக்க காவல்துறை சிறிய தடியடி நடத்தினர்.

பாதுகாப்பு காரணங்கள் காரணமாக உள்ளே செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தை கட்ட முயற்சி எடுத்தவர் முன்னாள் முதலமைச்சரும் அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ்.

நடந்தது என்ன?

முலாயம் சிங் முதலமைச்சராக பதவி வகித்தபோதுதான், சர்வதேச மையத்தை கட்ட கோமதி நகரில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பதவி வகித்தபோது, சர்வதேச மையம் திறக்கப்பட்டது. 

சுவர் ஏறி குதித்து மையத்திற்கு உள்ளே சென்ற அகிலேஷ், அங்குள்ள திருவுருவ சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னைத் தடுக்க போலீஸாரை இங்கு நிறுத்தியிருப்பது வருத்தமாக இருக்கிறது. என்னைத் தடுப்பவர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மையத்தின் திறப்பு விழா நடந்தபோது முலாயம் சிங் இங்கு வந்திருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. 

ஒரு சோசலிஸ்ட் தலைவருக்காக இங்கு ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டது. சோசலிஸ்ட் தலைவருக்காக கட்டப்பட்ட ஒரே அருங்காட்சியகம். எனவே மக்கள் அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்படலாம். ஜனநாயகத்தில் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவது மக்களை ஊக்கப்படுத்தலாம். மக்களின் குரலை நசுக்குகிறீர்கள். மக்களை உள்ளே நுழைய விடமாட்டார்கள்" என்றார்.

 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget