மேலும் அறிய

சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மரியாதை: ராகுல் காந்தி புறக்கணித்தாரா? Fact check குறும்படம் போட்ட காங்கிரஸ்

கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கும் போது சுவாமி விவேகானந்தரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புறக்கணித்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியிருந்தார்.

கடந்த வாரம், கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கும் போது சுவாமி விவேகானந்தரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புறக்கணித்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், உண்மையில் நிலவரம் என்ன என்பது குறித்து காங்கிரஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

விவேகானந்தர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்துவதும், ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை கிண்டல் செய்வதையும் ஒரே வீடியோவாக எடிட் செய்து காங்கிரஸ் கட்சி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானியை விமர்சிக்கும் விதமாக பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

"என்ன ஒரு முட்டாள்தனமான செயல். முட்டாள் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக" என ஸ்மிருதி இரானியை விமர்சித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா ட்வீட் செய்துள்ளார்.

இரானியின் கருத்துக்கு பதிலடி அளித்துள்ள காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், "பொய்களை பரப்புவதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. இரானிக்கு விஷயங்களை இன்னும் தெளிவாகப் பார்க்க உதவும் புதிய ஜோடி கண்ணாடிகள் தேவைப்பட்டால், எங்களால் அவருக்கு எப்போதும் வாங்கி தர முடியும். அவருக்கு ஒன்றை கொடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

வீடியோவில் ஸ்மிருதி இரானி கூறியிருப்பதாவது, “இன்று நான் காங்கிரஸ் கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் இந்தியாவை ஒருங்கிணைக்க கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை மேற்கொள்கிறீர்கள் என்றால், குறைந்தபட்சம் சுவாமி விவேகானந்தரைப் புறக்கணிக்கும் அளவுக்கு வெட்கமின்றி இருக்க வேண்டாம். விவேகானந்தரை கவுரவிக்கும் செயலை ராகுல் காந்தி ஏற்கவில்லை போலும்" என்றார்

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், 150 நாட்களுக்கு 'இந்திய ஒற்றுமை' நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நடைபயணத்தின் போது, ​​காங்கிரஸ் தலைவர்கள், நாட்டின் பல பகுதிகளில் மக்களுடன் உரையாடி பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொங்கி உள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட பேரணி, 150 நாள்களுக்கு நீள்கிறது. கிட்டத்தட்ட 3,500 கிமீக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

3,500 கிலோமீட்டர் தூர யாத்திரை பேரணியுடன் தொடங்கப்பட்டது. பாத யாத்திரை கடந்த வியாழக்கிழமை காலை தொடங்கியது. ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை இரண்டு தொகுதிகளாக நடைபயணம் மேற்கொள்வார்கள். அடுத்த 150 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் இதில் உள்ளடக்கும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை முடியும் வரை ராகுல் காந்தி நடந்தே செல்வார். நடைபயணம் முழுவதும் கண்டைனரிலேயே ராகுல் காந்தி தங்குகிறார். அதில், ஒரு படுக்கை, கழிப்பறை மற்றும் ஒரு ஏர் கண்டிஷனர் இருக்கிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
Indian Citizenship: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
Indian Citizenship: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Kim Jong Un: தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! Vida V2 இ ஸ்கூட்டரின் விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! Vida V2 இ ஸ்கூட்டரின் விலை எவ்ளோ?
TN weather: 5 நாட்களுக்கு விடாது பெய்யப்போகும் பேய் மழை; சென்னைக்கு நாளைக்கு இருக்கு சம்பவம் - வானிலையின் வார்னிங்
5 நாட்களுக்கு விடாது பெய்யப்போகும் பேய் மழை; சென்னைக்கு நாளைக்கு இருக்கு சம்பவம் - வானிலையின் வார்னிங்
Vijayabaskar: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் என்ன சிக்கல்? விடாப்பிடியாக எதிர்க்கும் அமைச்சர் யார்?
Vijayabaskar: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் என்ன சிக்கல்? விடாப்பிடியாக எதிர்க்கும் அமைச்சர் யார்?
Sirkazhi MLA Senthil Selvan : நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
Embed widget