மேலும் அறிய

2 ரஷ்யர்கள் மர்ம மரணம்; மேலும் ஒருவரை காணவில்லை: ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசாவில் அண்மையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவர் ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் அண்மையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவர் ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது காணாமல் போன நபர் உக்ரைன் போருக்கு எதிரான செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்துபோன ரஷ்ய நாட்டு எம்.பி.யும் புதினின் தீவிர விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையில் ஒரு நபர் கையில் இரு பதாகையுடன் இருந்தார். அதில் நான் ஒரு ரஷ்ய அகதி. நான் போருக்கு எதிரானவன். நான் புதினுக்கும் எதிரானவன். எனக்கு வீடில்லை. எனக்கு உதவுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த நபரை புகைப்படம் எடுத்த சிலர் அதை சமூக வலைதளங்களில் பகிர அது இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் தான் ரஷ்ய தொழிலதிபர் பாவெல் அன்டோவ் மற்றும் அவருடன் பயணித்த விளாடிமிர் பிடெனோவும் ராயகடா மாவட்டத்தில் ஒரு ஓட்டலில் இறந்தனர். ஆன்டோவ் ரஷ்ய நாட்டு எம்.பி.யும் கூட. ஆன்டோவ் ஓட்டலின் 3வது மாடியில் இருந்து குதித்து கடந்த 24 ஆம் தேதி இறந்தார். பிடெனோவ் டிசம்பர் 22 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் ரயில் நிலையத்தில் பதாகையுடன் திரிந்த ரஷ்யரைக் காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ரயில்வே போலீஸ் தரப்பு, சில பயணிகள் ரஷ்யர் பற்றி தகவல் கொடுத்ததும் நாங்கள் அவரிடம் விசாரித்தோம். அவருடைய பாஸ்போர்ட், விசா எல்லாம் சரியாகவே இருந்தன. அதனால் நாங்கள் அவரை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவரால் ஒருவார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச இயலவில்லை. அவருடைய பதாகையில் மட்டுமே ஆங்கிலத்தில் இருந்தது. ஆனால் இப்போது அவரைக் காணவில்லை. ராயகடாவில் இரண்டு ரஷ்யர்கள் அதுவும் இருவரும் புதினுக்கு, உக்ரைன் போருக்கு எதிரானவர்களாக இருந்து கொல்லப்பட்ட நிலையில் நான் புதின் எதிர்ப்பாளர் என்று பதாகையிலேயே வெளிப்படையாக எழுதியிருந்த ரஷ்யர் மாயனமானது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது என்று கூறியுள்ளனர். ரஷ்யர்கள் இருவர் உயிரிழப்பு பற்றி சிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

புதின் விருப்பம்:

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 10 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷிய படைகள் திரும்பப்பெற்றுள்ளது. 

இதற்கு மத்தியில், அணு ஆயுத பயன்பாடு குறித்து ரஷிய அதிபர் புதின் பேசியது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பி இருந்தது. சமீப காலமாகவே, ரஷியா போரில் பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கி அந்நாடு புதிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக புதின் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். உக்ரைனும் அமெரிக்காவும் ரஷியாவின் கவலைகளை புறக்கணித்துள்ளதாகவும் உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்தி ரஷியாவை பலவீனமாக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய முயல்வோம். அதுவே, சிறந்தது. எல்லாப் மோதல்களும் ஏதோ ஒரு விதத்தில் பேச்சு வார்த்தைகளுடன் முடிவடையும்.. நமது எதிரிகள் (கிய்வில்) எவ்வளவு வேகமாகப் புரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும்" என்று கூறியது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget