மேலும் அறிய

அதானி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு... நிபுணர் குழுவை அமைத்த நீதிபதிகள்..! 

பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

ஹிண்டன்பர்க் அறிக்கை:

அதில், ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்துள்ளது. 

ஆனால், அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.

இந்திய முதலீட்டாளர்களுக்கு இழப்பு:

பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. 

நிபுணர் குழுவில் ஓ.பி.பட், ஜே.பி.தேவ்தர், கே.வி.காமத், நந்தன் நிலகேனி, சோமசேகர் சுந்தரேசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக செபி நடத்தும் விசாரணையின் அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம் அதிரடி:

இந்த பிரச்னைக்கு வழிவகுத்த காரண காரணிகளை ஆராய்ந்து, முதலீட்டாளர்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிபுணர் குழு பரிந்துரைக்கும். அதேபோல, ஒழுங்குமுறை அமைப்பின் தோல்வி காரணமாக பிரச்னை நிகழ்ந்ததா என்பது குறித்தும் குழு ஆராய உள்ளது.

சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பிற்காக தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் பாதுகாப்பான விதிகளையும் குழு பரிந்துரைக்கும்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை அமைக்க தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசும் செபி அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக தெரிவித்திருந்தது.

ஆனால், நிபுணர் குழுவின் நோக்கம், அதன் உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றை தாங்களே பரிந்துரை செய்ய அனுமதி வழங்க வேண்டும், அதன் விவரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்பிக்க  மத்திய அரசும் செபி அமைப்பும் அனுமதி கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை
Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை
PM Modi: புதிய கண்டுபிடிப்புகளில் வேகமாக முன்னேறும் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்
PM Modi: புதிய கண்டுபிடிப்புகளில் வேகமாக முன்னேறும் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் டயர் உருட்டி ஆர்ப்பாட்டம் !
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் டயர் உருட்டி ஆர்ப்பாட்டம் !
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கோட் சூட் அரசியல் TRENDSET செய்த விஜய் ஈர்க்கப்படும் இளைஞர்கள்!
திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!
’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ
ரஜினி பட ஷூட்டிங்கில் விபத்து 28 வயது இளைஞர் உயிரிழப்பு போலீஸ் தீவிர விசாரணை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMK: ”விஜய் ஆட்சி நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்” அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?
”விஜய் ஆட்சி நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்” அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?
Karuppu First Day Collection: கருப்பு முதல் நாள் வேட்டை..! சூர்யா படத்தின் வசூல் நிலவரம் - பாக்ஸ் ஆஃபிஸில் கோடிகளா?
கருப்பு முதல் நாள் வேட்டை..! சூர்யா படத்தின் வசூல் நிலவரம் - பாக்ஸ் ஆஃபிஸில் கோடிகளா?
TN Govt Cabinet: அமைச்சர்களுக்கு இன்று துறைகளை ஒதுக்கும் முதலமைச்சர் விஜய்? காங்., இலாகாக்கள் என்ன?
TN Govt Cabinet: அமைச்சர்களுக்கு இன்று துறைகளை ஒதுக்கும் முதலமைச்சர் விஜய்? காங்., இலாகாக்கள் என்ன?
TN Weather Update: சென்னையில் குளுகுளு நேரம், 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? இன்றைய தமிழக வானிலை
சென்னையில் குளுகுளு நேரம், 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? இன்றைய தமிழக வானிலை
Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை
Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை
Toyota Glanza: பாதுகாப்பு பரிசோதனை - 0 ஸ்டார் வாங்கி அதிர்ச்சி அளித்த டொயோட்டா கார் - என்ன பிரச்னை?
Toyota Glanza: பாதுகாப்பு பரிசோதனை - 0 ஸ்டார் வாங்கி அதிர்ச்சி அளித்த டொயோட்டா கார் - என்ன பிரச்னை?
IAS Transfer: கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்! ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் முதலமைச்சர் விஜய்!
IAS Transfer: கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்! ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் முதலமைச்சர் விஜய்!
மதுரை மக்களே வெளியானது கடைசி லிஸ்ட்... நாளை (16.05.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் இது தான் !
மதுரை மக்களே வெளியானது கடைசி லிஸ்ட்... நாளை (16.05.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் இது தான் !
Embed widget