மேலும் அறிய

அதானி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு... நிபுணர் குழுவை அமைத்த நீதிபதிகள்..! 

பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

ஹிண்டன்பர்க் அறிக்கை:

அதில், ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்துள்ளது. 

ஆனால், அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.

இந்திய முதலீட்டாளர்களுக்கு இழப்பு:

பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. 

நிபுணர் குழுவில் ஓ.பி.பட், ஜே.பி.தேவ்தர், கே.வி.காமத், நந்தன் நிலகேனி, சோமசேகர் சுந்தரேசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக செபி நடத்தும் விசாரணையின் அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம் அதிரடி:

இந்த பிரச்னைக்கு வழிவகுத்த காரண காரணிகளை ஆராய்ந்து, முதலீட்டாளர்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிபுணர் குழு பரிந்துரைக்கும். அதேபோல, ஒழுங்குமுறை அமைப்பின் தோல்வி காரணமாக பிரச்னை நிகழ்ந்ததா என்பது குறித்தும் குழு ஆராய உள்ளது.

சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பிற்காக தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் பாதுகாப்பான விதிகளையும் குழு பரிந்துரைக்கும்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை அமைக்க தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசும் செபி அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக தெரிவித்திருந்தது.

ஆனால், நிபுணர் குழுவின் நோக்கம், அதன் உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றை தாங்களே பரிந்துரை செய்ய அனுமதி வழங்க வேண்டும், அதன் விவரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்பிக்க  மத்திய அரசும் செபி அமைப்பும் அனுமதி கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

NEET தேர்வால் முடக்கப்பட்ட Telegram... மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது எப்படி?
NEET தேர்வால் முடக்கப்பட்ட Telegram... மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது எப்படி?
விவசாயிகளுக்கு நிம்மதி! KCC கடனுக்கு புதிய காலக்கெடு விதிகள் அமல் தேதி அறிவிப்பு!
விவசாயிகளுக்கு நிம்மதி! KCC கடனுக்கு புதிய காலக்கெடு விதிகள் அமல் தேதி அறிவிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Qatar fire accident : கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
Embed widget