மேலும் அறிய

பாதிக்கப்பட்ட நடிகை குறித்து கேலி பேச்சு: திலீப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ

வெறுப்பு பேச்சை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள கேரள ஜனபக்சம் (மதச்சார்பற்ற) கட்சி தலைவர் பி.சி. ஜார்ஜ், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களை குறை கூறுவது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, அரசியல்வாதிகள் போகிற போக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றச்சாட்டு சுமத்திவிட்டு சென்று விடுகின்றனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எந்த விதமான பாதிப்பை அந்த பெண்கள் மீது இச்சமூகம் ஏற்படுத்துகிறது என்பது தெரிவதில்லை. அப்படி ஒரு சம்பவம்தான், கேரளாவில் தற்போது நிகழ்ந்துள்ளது. 

ஏற்கனவே, வெறுப்பு பேச்சை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள கேரள ஜனபக்சம் (மதச்சார்பற்ற) கட்சி தலைவர் பி.சி. ஜார்ஜ், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த கருத்து தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 

2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய பெண், அந்த வழக்கின் மூலம் தொழில் ரீதியாக பலன் அடைந்தார் என ஜார்ஜ் கூறியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி 17 அன்று தனது காரில் கடத்தப்பட்டு 2 மணி நேரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரபல நடிகை குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். முதலில் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பாலியல் தாக்குதலை நடத்தி திலீப் திட்டமிட்டதாக பாதிக்கப்பட்ட நடிகை குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து திலீப்பும் கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ஜார்ஜ் மீதே பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், வியாழன் அன்று கோட்டயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திலீப் வழக்கில் நடிகையை 'உயிர் பிழைத்தவர்' எனக் குறிப்பிடப்படுவதை கேலி செய்திருந்தார். செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பேசிய அவர், "உயிர் பிழைத்தவருக்கு இப்போது பல படங்கள் வருகின்றன. பிரச்சினைக்குப் பிறகு அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை.

சொல்லப்பட்ட சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்ணாக அவர் வாழ்க்கையில் அடைந்த இழப்பு மிகப்பெரியதாக இருக்கலாம். ஆனால், மற்ற துறைகளில் அவருக்கு பலன் கிடைத்தது என்பது என் நம்பிக்கை" என்றார்.

ஜார்ஜின் கருத்துகளை செய்தியாளர்கள் விமர்சித்த பிறகும், அவர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்த வழக்கில் திலீப் நிரபராதி என கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சொல்லி வருகிறார்.

2012 ஆம் ஆண்டு டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியை விட கொடூரமாக தாக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கும்போது, அந்த பெண் எப்படி அடுத்த நாளே வேலைக்கு சென்றிருக்க முடியும் என்றும் ஜார்ஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்த தேநீர் வழங்குவதாகக் கூறி முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களைத் தவிர்க்குமாறு ஒரு நிகழ்ச்சியில் ஜார்ஜ் பேசியிருந்தார். இதையடுத்து, பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காக ஜார்ஜ் மீது மே மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget