Su Venkatesan: 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் "ஜனநாயக படுகொலை" எம்.பி சு. வெங்கடேசன் காட்டம்! ABP Exclusive
Su Venkatesan: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கியபோது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பிரச்சனைகள் குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதை சு. வெங்கடேசன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவை விதிகளை மீறியதாக காங்கிரஸ் உள்பட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு குறித்து சி.பி.எம் எம்.பி சு. வெங்கடேசனை ஏபிபி நாடு-க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குத் தடை
இது குறித்து நமது செய்தியாளர் கேள்விக்கு பதலளித்து பேசிய அவர், நாடாளுமன்ற குடியரசு தலைவர் தீர்மானத்திற்கு நன்றி சொல்லும் உரையை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்தார். நேற்றைக்கு போலவே குறிப்பிட்ட ஒரு வெளிவராத புத்தகத்தை பற்றி பேசவே கூடாது என்று அவைத்தலைவர் சொன்ன போது, அதை அவையின் பரிசீலனைக்கு ராகுல் காந்தி முன் வைத்தார். மேலும் நாட்டினுடையை பாதுக்காப்பு எவ்வளவு கேள்விக்குறியாகி உள்ளது என தனது பேச்சை ராகுல் காந்தி தொடர்ந்தார்.
யாருக்கும் அதிகாரம் கிடையாது.
ஆனால் அவைத்தலைவர் ராகுல் அவர்கள் இதையெல்லாம் பேசக்கூடாது என்று அவைத்தலைவர் முயற்சி செய்தார். ஒரு உறுப்பினர் எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்பதையெல்லாம் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
குடியரசு தலைவரின் உரையில் இந்திய-சீன உறவு குறித்தும், இந்திய அமெரிக்க உறவு பற்றியே விவாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் பட்ஜெட்டிலும் அது தான் முன்வைக்கப்பட்டிருந்தது. அப்படி இருக்கும் போது இரண்டு நாடுகளின் பிரச்னையை பேசக்கூடாது என்பதை சொல்ல முடியாது என்று ராகுல் காந்தி வாதிட்டார்.
ஜனநாயகப் படுகொலை மற்றும் நாடாளுமன்ற மரபு மீறல்
இதையெல்லாம் ராகுல் காந்தி பேச அனுமதிக்கமாட்டேன் என்ற சபாநாயகர் உடனடியாக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவரை பேச அழைத்தார்.இது அப்பட்டமான அநீதி, 240-க்கும் மேற்ப்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இருக்கும் அவையில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித்தலைவரை பேசாமல் தடுத்துவிட்டு, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவரை பேச வைப்பது என்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை, நாடாளுமன்ற மரபை அழிக்கிற செயலாக இருந்தது. இதற்காக நாடளுமன்ற மைய பகுதிக்கு சென்று குரல் கொடுத்தோம். இதற்காக நான் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் உட்பட 8 பேரை தகுதி நீக்கம் செய்வதாக நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஒரு தீர்மானத்தை அவையில் முன் மொழிந்து அந்த தீர்மானமானது நிறைவெற்றபட்டது.
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னணி
கேள்வி: நாடளுமன்றத்தில் பேப்பரை கிழித்து எறிவது அவையை கலங்கப்படுத்துவது ஆகாதா?
இதற்கு பதிலளித்த எம்.பி இது அவையை கலங்கப்படுத்துவது எங்களது நோக்கமல்ல, அவையின் மரபை, ஜனநாயக விதிகளை கலங்கப்படுத்தும் வேலையை கடந்த இரண்டு நாட்களாகவே ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் செய்தார்கள். ஒரு விஷயத்தை பேசவேக்கூடாது என்று சொல்ல முடியாது. குறிப்பாக நாட்டினுடைய அடிப்படை பாதுக்காப்பு விஷயத்தை விவதிப்பது குறித்து அந்த துறையின் அமைச்சர் தவறு என்றால் சொல்லட்டும், அதை நாட்டு மக்கள் தெரிந்துக்கொள்ளட்டும். ஆனால் மக்கள் அதை தெரிந்துக்கொள்ளவே கூடாது என்னும் விதி எதுவுமில்லையே. அதற்கு எதிராக தான் நாங்கள் ஜனநாயக விதிப்படி போராடினோம்.
எதிர்க்கட்சிகளின் ஒருமித்தப் போராட்டம்
இதற்கு திமுக எம்.பிக்களும் ஆதரவு கொடுத்தார்களா என்கிற கேள்விக்கு”அனைத்து எதிர்க்கட்சி எம்.பிக்களும் அவைக்கு மையப்பகுதிக்கு வந்து குரல் கொடுத்தார்கள் என்றார். மேலும் நாளை எங்களுக்காக அவர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள். எங்களை இப்படி ஒடுக்கிவிடமுடியாது இந்த உரிமை மீறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்























