மேலும் அறிய

அல்வா கொடுத்த தேர்தல் அதிகாரி.. அழுது புரண்ட ஆம் ஆத்மி வேட்பாளர்.. சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது என்ன?

சண்டிகர் மேயர் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இருப்பினும், தொகுதி பங்கீட்டில் பிரச்னை, கூட்டணியில் இருந்து பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விலகியது INDIA கூட்டணிக்கு பெரும் பின்னடைவை தந்து வருகிறது.

இருந்த போதிலும், கூட்டணியை ஒற்றுமையுடன் நடத்தி சென்று பாஜகவை வீழ்த்துவதில் தலைவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் ஒன்றிணைந்தது. முதலில், சண்டிகர் மேயர் தேர்தல் ஜனவரி 18ஆம் தேதி நடைபெறவிருந்தது. 

கவனத்தை ஈர்த்த சண்டிகர் மேயர் தேர்தல்: 

ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு காய்ச்சல் இருப்பதாக கூறி, பிப்ரவரி 6ஆம் தேதிக்கு மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ஜனவரி 30 (இன்று) நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

மொத்தம் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் மேயர் தேர்தலில் நின்ற குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தது. பாஜக மேயர் வேட்பாளர் மனோஜ் குமார் சோங்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோங்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதில், பாஜக அநியாயமாக செயல்பட்டதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து டெல்லி முதலமைச்சரும் ஆத் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "சண்டிகர் மேயர் தேர்தல் நடத்தப்பட்ட விதம் மிகவும் கவலை அளிக்கிறது. 

INDIA கூட்டணிக்கு அல்வா கொடுத்த தேர்தல் அதிகாரி: 

நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்கள். ஒரு மேயர் தேர்தலுக்காக இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கினால், நாட்டின் தேர்தலுக்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இது மிகவும் கவலை அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டா கூறுகையில், "இது தேசத் துரோகச் செயலாகும். எங்களின் எட்டு ஓட்டுகளும் (செல்லாதவை) அறிவிக்கப்பட்டன. பாஜகவின் ஒரு ஓட்டு கூட செல்லாததாக அறிவிக்கப்படவில்லை. ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டால், அனைத்து கட்சிகளின் முகவர்களிடமும் (வாக்கு சீட்டை) தேர்தல் அதிகாரி காட்ட வேண்டும். ஆனால், இன்று அது நடக்கவில்லை" என்றார்.

 

முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தலில் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார், துக்கத்தில் அனைவரின் முன்பும் அழுதார். ஆம் ஆத்மி கட்சியினர், அவரை சமாதானப்படுத்த முயன்றனர். பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
Postal Service: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
Netanyahu: “நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
“நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
Postal Service: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
Netanyahu: “நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
“நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
Trump New Tariff: ஃபர்னிச்சரை கூட விட்டு வைக்காத ட்ரம்ப்; 50 நாட்களில் வரி விதிக்க இருப்பதாக அச்சுறுத்தல்
ஃபர்னிச்சரை கூட விட்டு வைக்காத ட்ரம்ப்; 50 நாட்களில் வரி விதிக்க இருப்பதாக அச்சுறுத்தல்
Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 25-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னையில ஆகஸ்ட் 25-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
Embed widget