மேலும் அறிய

போலீஸில் இருந்து பேசுவதாக டார்ச்சர்.. முதியவரிடம் ரூ.9 கோடி மோசடி.. நடந்தது என்ன?

போலீஸ் அதிகாரிகள் என்று கூறி இந்த சைபர் மோசடியை மர்ம நபர்கள் நிகழ்ச்சியுள்ளனர். மும்பையின் தாகுர்த்வார் பகுதியைச் சேர்ந்த 85 வயது முதியவர் பணத்தை இழந்து தவித்து வருகிறார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முதியவர் ஒருவரிடம் சைபர் மோசடியாக ரூ.9 கோடி திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

போலீஸ் அதிகாரிகள் என்று கூறி இந்த சைபர் மோசடியை மர்ம நபர்கள் நிகழ்ச்சியுள்ளனர். மும்பையின் தாகுர்த்வார் பகுதியைச் சேர்ந்த 85 வயது முதியவர் பணத்தை இழந்து தவித்து வருகிறார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம்.  மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள தாகுர்த்வாரில் பாதிக்கப்பட்ட முதியவர் தனது மூத்த மகளுடன் வசித்து வருகிறார். இவரின் இளைய மகள் அமெரிக்காவில் உள்ளார். இப்படியான நிலையில் கடந்த நவம்பர் 28ம் தேதி அந்த முதியவரின் மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தான் நாசிக்கில் உள்ள பஞ்சவதி காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தீபக் சர்மா என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். 

மேலும் உங்களின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது.  இந்தக் கணக்கு பெரிய அளவிலான பணமோசடிக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் முதியவரிடம் அந்த நபர் கூறியுள்ளார். மேலும் அதிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு பணம் பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை சிபிஐ குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருவதாகவும், விரைவில் உங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எதிரில் இருந்த நபர் மிரட்டியுள்ளார். இதன் பின்னர் அவருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ அழைப்பு வந்தது. போலீஸ் சீருடை அணிந்திருந்த நபர் பேசியுள்ளார். முதியவரிடம், இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைத்தால், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும், மின்னணு விசாரணை நடைபெற்று வருவதால், அவர் காவல் நிலையத்திற்கு வரத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். 

இப்போது நீங்கள் டிஜிட்டர் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள். விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என முதியவரை பயம் காட்டியுள்ளனர். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி முதியவரின் வங்கி விவரங்கள், பண இருப்புகள், பரஸ்பர நிதிகள், பங்குச்சந்தை முதலீடுகள், நிலையான வைப்புத்தொகை தொடர்பான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். 

தொடர்ந்து அவரை நம்ப வைக்க உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கியின் பெயரில் போலி ஆவணங்களை அனுப்பியுள்ளனர். உங்களுடைய பணத்தை முழுமையாக நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், விசாரணை முடிந்ததும் வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவரிடம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 17 ஆம் தேதி RTGS மூலம் மொத்தம் ரூ.9 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். வங்கி ஊழியரின் ஒருவரால் இந்த பிரச்னைக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget