மேலும் அறிய

Ethylene Oxide in Food: புற்றுநோய் ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்சைடு.. இந்தியாவை சேர்ந்த 527 உணவுப் பொருட்களில் கலப்படம்..

இந்தியாவை சேர்ந்த 527 உணவுப் பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2020 மற்றும் ஏப்ரல் 2024 க்கு இடையில், ஐரோப்பிய ஒன்றிய  உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்த 527 உணவுப் பொருட்களில் புற்றுநோயுடன் தொடர்புடைய தீங்கு விளைவிக்கும் எத்திலீன் ஆக்சைடு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் 1991 இல் எத்திலீன் ஆக்சைடு உபயோகத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும், இறக்குமதி அதிகரித்ததால், அதிகாரிகள் இப்போது தங்கள் சோதனைகளை மீண்டும் துரிதப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இருந்து 527 பொருட்கள் அதில் உலர் கொட்டைகள் (nuts) மற்றும் எள்ளு (313), மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் (60), டையட் ஃபுட் (diet food) (48), பிற உணவுப் பொருட்கள் (34) இந்த பட்டியலில் அடங்கும். எள் விதைகள், கருப்பு மிளகு மற்றும் அஸ்வகந்தா போன்ற சில பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு இருந்தாலும் அவை ஆர்கானிக் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 87 பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்கள் சூப்பர் மார்க்கெட் அல்லது சந்தையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து பல பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம்  இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய எள் விதைகளைப் பயன்படுத்தி ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட ஹம்முஸ் (hummus) முதல் பேக்கரி பொருட்கள் மற்றும் மூலிகை உணவுப் பொருட்கள் வரை பல்வேறு பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு கண்டறியப்பட்டுள்ளது.

எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?  

எத்திலீன் ஆக்சைடு ஒரு நிறமற்ற வாயு. இது பல்வேறு தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனமாகும். பொருட்களை சுத்தம் செய்யவும், உணவில் கிருமிகள், பூச்சிகள் நீக்க மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். உணவைப் பாதுகாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு அதிகமாக நாம் உட்கொண்டால் அது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதேபோல் எத்திலீன் ஆக்சைடை சுவாசிப்பது நம் உடலுக்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் கூட உண்டாகக்கூடும் என கூறப்படுகிறது.

எனவே, கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உணவுகளில் எத்திலீன் ஆக்சைடு மிகச் சிறிய அளவில் பயன்படுத்தப்படும் போது, ​​அது பொதுவாக பாதுகாப்பானது, ஏனெனில் இது உணவை மிக விரைவாக கெட்டுப்போகாமல் இருக்க உதவுகிறது. ஆனால் உணவில் அதிக அளவு எத்திலீன் ஆக்சைடு இருந்தால், அது தீங்கு விளைவிக்கும். அதனால்தான், உணவில் பயன்படுத்தப்படும் எத்திலீன் ஆக்சைட்டின் அளவு நாம் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானதா என்பதை உணவு கட்டுப்பாட்டாளர்கள் உறுதிப்படுத்துவது முக்கியம்.

பூச்சிகளைத் தடுக்க இது பொதுவாக மசாலாப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு உள்ள உணவுகளை உட்கொள்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். சமீபத்திய அறிக்கைகளின்படி, உணவுக் கட்டுப்பாட்டாளர் FSSAI, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மசாலா பொருட்கள் மீது சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இவை புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதால் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நாம் ஒவ்வொரு முறையும் உணவு பொருட்களை வாங்கும் போது அதில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பதை படித்துப் பார்த்து கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.        

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget