மேலும் அறிய

இந்திய வங்கியின் மெகா ஊழல்...கோடி கணக்கிலான சொத்துகள் பறிமுதல்

மகாராஷ்டிராவை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து 415 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இயக்குநரகம் இன்று பறிமுதல் செய்துள்ளது. 

பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த உரிமையாளரிடமிருந்து 415 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இயக்குநரகம் இன்று பறிமுதல் செய்துள்ளது. 

இந்திய வங்கியில் நடைபெற்ற மிக பெரிய மோசடி வழக்கில் இந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரேடியஸ் டெவலப்பர்ஸின் சஞ்சய் சாப்ரியா மற்றும் ஏபிஐஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் அவினாஷ் போசலே ஆகியோர் யெஸ் பேங்க்-டிஎச்எஃப்எல் (திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்) வழக்கில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு 34,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம், புனேவில் உள்ள அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டரை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இன்று, மும்பையின் சான்டாக்ரூஸில் உள்ள 116.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், பெங்களூரில் உள்ள 115 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், சாப்ரியாவின் நிறுவனத்தின் 25% பங்குகள், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சான்டாக்ரூஸில் உள்ள மற்றொரு பிளாட், 3.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சஞ்சய் சாப்ரியாவின் மூன்று உயர் ரக சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அவினாஷ் போசலேவின் சொத்துகள் ரூ.102.8 கோடி மதிப்புள்ள மும்பையில் உள்ள டூப்ளக்ஸ் பிளாட், ரூ.14.65 கோடி மதிப்புள்ள புனேயில் ஒரு நிலம், ரூ.29.24 கோடி மதிப்புள்ள புனேயில் மற்றொரு நிலம், நாக்பூரில் 1.45 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இருவருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் அமலாக்கத்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 1,827 கோடி ரூபாய் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர், டிஎச்எஃஎல் ப்ரோமட்டர்கள் கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வானை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget