மேலும் அறிய

Opposition on BJP: ராகுலுக்கு சிறை..விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜக?.. உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட எதிர்க்கட்சிகள்

விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.

விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன. 14 கட்சிகள் சார்பிலான இந்த முறையீடு மீதான விசாரணை வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை:

2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, மோடி சமூகத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த குஜராத் நீதிமன்றம், ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதேநேரம், அவருக்கு ஜாமின் வழங்கியதோடு, மேல்முறையீடு செய்யலாம் எனவும் வலியுறுத்தியது. முக்கிய எதிர்க்கட்சி தலைவராக கருதப்படும் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், பாஜக அரசின் செயல்பாடு தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

14 கட்சிகள் புகார்:

ஆலோசனையை தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் திமுக, ஆர்ஜேடி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்டிரா சமிதி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. குறிப்பிட்ட கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞரான  அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் முறையிட்டார்.  அப்போது, சிபிஐ மற்றும்  அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை  பாஜக தலைமையிலான அரசு தவறாக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏவப்படுகிறது.  2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக வென்று மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளால் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 95%, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரானது தான். அதோடு, வரைமுறையின்றி  எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்கிறது. எனவே, புலனாய்வு அமைப்புகளின்  விசாரணையின் போது  கைதுக்கு முன்பு மற்றும் பின்பான நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதையேற்ற சந்திரசூட் தலைமையிலான அமர்வு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மீதான விசாரணை வரும் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என அறிவித்தது. 

மக்களவை முடக்கம்:

இதனிடையே, இன்று மக்களவை கூடியதுமே ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவைத்தலைவர் அமைதி காக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய பிறகும், உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால், அவை கூடிய சில நிமிடங்களிலேயே நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும், ராகுல் காந்திக்கு மக்களவையில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் திங்கட்கிழமை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

எம்.பி. பதவியை இழந்தாரா ராகுல் காந்தி?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் எந்தவொரு எம்.பி மற்றும் எம்.எல்.ஏவும் உடனடியாக தங்களது பதவியை இழந்துவிடுவர் என, உச்சநீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்த வகையில் ராகுல் காந்தியும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதால், தனது எம்.பி. பதவியை இழந்துவிட்டதாக சட்டவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், மக்களவை செயலகத்தில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Embed widget