மேலும் அறிய

ஆடி பட்டம் தேடி விதை.. ஆடிப்பெருக்கு தினத்தில் நெல் நாற்று விடும் விவசாயிகள்

ஆடி பட்டம் தேடி விதை ஆடிப்பெருக்கு தினத்தில் நெல் நாற்று விடும் விவசாயிகள்

ஆடி மாத புது மழையில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல, நெல்மணிகள் விளைச்சல் அடைய வேண்டும் என்பதற்காக ஆடிப்பெருக்கு தினத்தில் நெல் நாற்று விடும் விவசாயிகள்.


ஆடி பட்டம் தேடி விதை.. ஆடிப்பெருக்கு தினத்தில் நெல் நாற்று விடும் விவசாயிகள்

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கு பருவத்திற்கு ஏற்ற விவசாயம் செய்து வருகின்றனர். இதில் ஆடிப்பட்டம் தேடி விதை என்று ஆடி மாதத்தில் விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம். அதில் குறிப்பாக நெல் நாற்று விடப்படும்.

இந்த ஆடிப்பெருக்கு தினத்தில் நாற்று விட்டால், மழை பொழிந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது போல, நெல்மணிகள் நன்கு விளைச்சல் அடைந்து, நல்ல மகசூல் கொடுக்கும். அதே போல் ஆடிப்பெருக்கு தினத்தில் நாற்று விடும்பொழுது நோய் தாக்குதல் இல்லாமல், மருந்தில்லாமல், இயற்கை முறையில் நல்ல வளர்ச்சி அடைந்து மகசூல் கிடைக்கும் என்பதால் ஆடிப்பெருக்கு தினத்தில் விவசாயிகள் நெல் நாற்று விடுவது வழக்கம்.

மேலும் பருவ மழை வருகின்ற பொழுது தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமி ஆக பெரும்பாலும், பருவ மலைகளை நம்பி சிறுதானியங்கள் உள்ளிட்ட வறட்சிக்கேற்ற பயிர்களையே சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் வரக்கூடிய வடகிழக்கு பருவமழை  பொய்த்து போனதால், விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகியது குடிநீருக்கே மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது.  

இதனால் எந்த பயிரையும் விவசாயிகள் சாகுபடி செய்யாமல் இருந்து வந்தனர். இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பு, மாவட்டம் முழுவதும் அவ்வப்போது கன மழையும், தொடர் சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் பருவமழை கை கொடுக்கும் என நம்பி ஆடிப்பட்டத்தில் நெல் நாற்று விடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இதில் தருமபுரி, ஒடசல்பட்டி, கடத்தூர், பொம்மிடி, அரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஆடிப்பெருக்கு தினத்தில், நிலத்தில் பூஜை செய்து சாமியை வணங்கி, விவசாயிகள் நெல் நாற்று விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே இந்த நாற்றுகளை நடவு செய்ய முடியும். மழை வரவில்லை என்றால், இந்த நாற்று முழுவதும் பயனில்லாமல் போய்விடும், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். ஆனால் பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் ஆடிப்பெருக்கு தினத்தில் நெல் நாற்று விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு வகையான பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!
ஆப்கானை துரத்தும் பேட் லக்.. ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!
ஆப்கானை துரத்தும் பேட் லக்.. ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
"நாட்டை விட்டு வெளியேத்துங்க" டிரம்ப் ஸ்டைலில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குறி வைத்த அமித் ஷா
Seeman: விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Embed widget