Krishnagiri Power Cut : கிருஷ்ணகிரியில் நாளை மின்தடை! எந்தெந்த ஊர்களில் மின்தடை? முழு விபரம்!
krishnagiri Power Cut (19-02-2026): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது.

பர்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (10.02.2026) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
பர்கூர் துணை மின் நிலையம்:
பர்கூர் நகர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், கந்திகுப்பம், குறும்பர் தெரு, நேரலகோட்டை.
ஓசூர் (ஓரப்பம்) துணை மின் நிலையம்:
ஓரப்பம் எலத்தகிரி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி.
வரட்டனப்பள்ளி துணை மின் நிலையம்
வரட்டனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, காளிகோவில்.
மகாராஜகடை துணை மின் நிலையம்:
மகாராஜகடை, நாரலப்பள்ளி, பெரிய சாகனவூர், எம்.சி. பள்ளி, கோட்டப்பள்ளி, தக்கப்பள்ளி, கோத்தி நாயனப்பள்ளி, பூசாரிப்பட்டி, பி.சி. புதூர்
உத்தனப்பள்ளி துணை மின் நிலையம்:
உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்க்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேபள்ளி, உள்ளுகுறுக்கை, போடிச்சிப்பள்ளி, காடு உத்தனப்பள்ளி, இருதாளம், வரகானப்பள்ளி, டி.கொத்தப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை, கரூர், பொம்மதாத்தனூர், சின்னட்டி.கனஞ்சூர், டி.கொத்தூர், பைரமங்கலம், ஐக்கேரி, பச்சப்பனட்டி, பேவநத்தம், அலசட்டி, பஞ்சாட்சிபுரம், டி.குருபரப்பள்ளி, தேவகானப்பள்ளி, சீபம், சாமனப்பள்ளி, சின்னபேட்டை, கானப்பள்ளி, கீரனப்பள்ளி, பாலகுளி, சானமாவு.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.























