மேலும் அறிய

போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்.. மேலும் ஒருவர் கைது.

போலி முகாம் குறித்து தகவல்களை மறைத்து, போலி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியது கண்டுபிடிப்பு-கிருஷ்ணகிரி என்சிசி ஒருங்கிணைப்பாளர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவி, நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். 

போலி என்சிசி பயிற்சியாளர் வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்

 மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர் முதல்வர் உள்பட மொத்தம் 13 பேர் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் சிகிச்சை பலனின்றி கடந்த 23ஆம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் உத்தரவின் பெயரில் ஐஜி பவானிஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஜெய் ஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

என்சிசி போலீஸ் பயிற்சியாளர் மீண்டும் ஒருவர் கைது

இந்த விசாரணையில் வேறு ஒரு தனியார் பள்ளியில் சிவராமநால் நடத்தப்பட்ட போலி முகாமில் கலந்து கொண்ட 14 வயது மாணவியும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பள்ளியின் பெண் முதல்வரும் கைது செய்யப்பட்டார். 

 இதனால் கிருஷ்ணகிரி அருகே இரு பள்ளிகளில் நடைபெற்ற போலி என்.சி.சி பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிவராமன் மட்டும் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கில் விசாரணை நடத்தும் ஐஜி பவனேஸ்வரி

இந்த வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி பாவனீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் போலி பயிற்சியாளர் சிவராமனுக்கு பயிற்சி முகாம் நடத்த உதவியுடன் போலி முகாமில் கலந்து கொண்டதாக  காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்சிசி அலுவலரும், கிருஷ்ணகிரி மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளருமான, கோபு என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

 இந்த விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளில் உள்ள என்.சி.சி அலுவலர்கள் மற்றும் என்.சி.சி முகாம்கள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய கோபுவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.   

ஆனால் போலி பயிற்சியாளராக சிவராமன் இருப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபு உதவி செய்தது போலி முகாம் குறித்த தகவல்களை மறைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட என். சி .சி ஒருங்கிணைப்பாளர் கோபுவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். மேலும் சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்தும் மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் கோபு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

 குறிப்பாக ஒரு சில தனியார் பள்ளிகளில் நடந்த போலி முகாம்களில் கோபுவும் கலந்து கொண்டது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலி என்.சி.சி முகாம் நடத்திவருக்கு உதவியதாக அரசு பள்ளி என்.சி.சி பயிற்சியாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதேபோல் இந்த முகாம் நடத்திய போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியது மற்றும்  தொடர்பு இருப்பதாக பல பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“I AM WAITING”  திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?
“I AM WAITING” திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?
Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan Meet Buddhist : தேம்பி அழுத புத்த பிட்சு..கண்ணீரை துடைத்த திருமா”தைரியமா இருங்க ஐயா”Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“I AM WAITING”  திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?
“I AM WAITING” திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?
Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Breaking News LIVE 19 Sep: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது
Breaking News LIVE 19 Sep: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது
Parotta Prasadham : தென்காசி பக்தர்களுக்கு பரோட்டா பிரசாதம், சன்னா மசாலா.. ஆஹா இது எப்டிருக்கு
தென்காசி பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்பட்ட பரோட்டோ, சன்னா மசாலா.. ஆஹா இது எப்டிருக்கு
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Embed widget