மேலும் அறிய

ரூ.900 கோடியில ரோடு போட்டு என்னங்க புண்ணியம், கொஞ்சம் மழை வந்தாலே நடக்க முடியல

பாலக்கோடு அருகே புதிய நான்கு வழிச்சாலையில், முறையான திட்டமிடல் இல்லாததால், பாலத்திற்கடியில் தேங்கும் மழைநீர். மேடு பள்ளம் தெரியாமல் மழை நீரில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள்.

தருமபுரி அதியமான்கோட்டை முதல் ராயக்கோட்டை வழியாக ஓசூர் வரை புதிய நான்கு வழிச்சாலை ரூ.899 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. இதில் கடகத்தூர், அல்லியூர், புலிக்கரை, சோமனஹள்ளி, கர்த்தாரப்பட்டி, பாலக்கோடு என பல்வேறு இடங்களில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஒப்படைக்கப்பட்டது‌. இந்நிலையில் புதிய நான்கு வழிச் சாலையில் மழைநீர், கழிவுநீர் செல்ல, அணுகு சாலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மழைக் காலங்களில் ஓசூர்-தருமபுரி புதிய சாலையில் பல்வேறு இடங்களில் பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதில் கர்த்தாரப்பட்டி-பாலக்கோடு செல்லும் பாலத்தின் கீழ் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம், மேடு தெரியாமல் இருப்பதால், சிலர் கீழே விழுந்து காயமடையும் சூழல் இருந்து வருகிறது. அதேபோல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள், விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், இருசக்கர வாகனம், கார், லாரி, பேருந்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த தண்ணீர் வெளியேற முடியாமல் இருப்பதற்கு காரணம், பாலத்தின் அருகில் இருபுறமும் உள்ள கால்வாய் உயரமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தரைப்பகுதி தாழ்வாக இருப்பதால், கால்வாய் உயரமாக இருப்பதால், தண்ணீர் கழிவு நீர் கால்வாய் பகுதிக்கு செல்ல முடியாமல், தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து பலமுறை தருமபுரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். 

இதனால் பாலக்கோடு பகுதியில் சிறிது நேரம் மழை பெய்தாலும் கூட, கர்த்தாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரம்த்திற்குள்ளாகி வருகின்றனர். 


ரூ.900 கோடியில ரோடு போட்டு என்னங்க புண்ணியம், கொஞ்சம் மழை  வந்தாலே நடக்க முடியல

எனவே பொதுமக்களின் நலன் கருதி ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ள, கழிவு நீர் கால்வாய்க்கு மழை தண்ணீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget