மேலும் அறிய

ஒகேனக்கல் அருகே காவிரி நீரை குடித்து கரையோரமாக சுற்றித் திரியும் யானைகள் கூட்டம்

ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்து கரையோரமாக சுற்றித் திரியும் யானைகள் கூட்டம்.

தருமபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய வனச் சரகங்கள் உள்ளது. இதில் யானை, புள்ளிமான், மயில், காட்டுப் பன்றி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில், வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, கிராமங்களுக்கு நுழைவது அடிக்கடி நிகழ்கிறது‌. இதனால் வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப் பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி வனப் பகுதியை விட்டு, ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால், அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் வனப் பகுதியிலேயே தருமபுரி மாவட்ட வனப் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. அவ்வாறு வரும் யானைகள், அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை உண்டும், கால்களால் மிதித்து அழித்து வருகிறது.

ஒகேனக்கல் அருகே காவிரி நீரை  குடித்து கரையோரமாக சுற்றித் திரியும் யானைகள் கூட்டம்
 
இந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போக்கு காட்டிவிட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப் பகுதியில் நுழைந்தது. தற்போது இந்த யானை கூட்டம் ஒகேனக்கல் ஆலம்பாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில்  யானைகள் வனப் பகுதி சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் கிளைகளை உடைத்தும், இலைகளை தின்று வருகின்றது. காலை, மாலை நேரங்களில் ஒகேனக்கல் அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன. இந்த நிலையில் 20க்கும் மேற்பட்ட யானைகள் 5 குட்டிகளுடன் சாலையை கடந்து காவிரி ஆற்றின் கரைக்குச் சென்று, குட்டிகளுடன் யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடித்து உற்சாகமாக குளியல் போட்டு விட்டு செல்கிறது. அதன் பின்னர் யானைகள் கூட்டமாக மீண்டும் வனப் பகுதிக்கு திரும்பி செல்கிறது. இதனால் கூட்டம் கூட்டமாக வரும் யானைகளை சாலையில் செல்பவர்கள் கண்டு ரசித்து, புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர். மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால், யானைகள் வெளியில் வர வாய்ப்புள்ளது. இதனால் வனத் துறையினர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து, வெளியில் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget