மேலும் அறிய

தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

மயக்க நிலையில் இருந்த யானையை அதிகாலை 3 மணி அளவில் சிள்ளாரஹள்ளி மலைப் பகுதியில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம்  உதவியுடன் பிடித்தனர்.

தருமபுரி பகுதியில் 15 நாட்களாக வனத் துறையினருக்கு போக்கு காட்டி வந்த ஒற்றை ஆண் யானையை அதிகாலை மயக்க ஊசி  செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர்.
 
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒற்றை ஆண் யானை ஊருக்குள் நுழைந்தது. இந்த யானை காரிமங்கலம், பாலக்கோடு, கம்பைநல்லூர், தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அப்பொழுது காரிமங்கலம் பகுதியில் அதிகாலையில் வயல்வெளிக்கு வந்த யானை இளம் பெண் ஒருவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயஸ்ரீ என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
 

மயக்க ஊசி செலுத்தி

 
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக வத்தல்மலை அடிவாரத்தில் ஆண் யானை சுற்றி திரிந்து வந்தது. இதனை தொடர்ந்து வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் சில நேரங்களில் யானை திடீரென மாயமாகி விடுவதால், வனத் துறையினர் யானையை தேடி அலைந்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று காலை முதல் பொம்மிடி, சில்லாரஹள்ளி பகுதிகளில் மலை அடிவாரத்தில் யானை சுற்றித் திரிந்தது. இதனை அடுத்து வனத் துறையினருக்கு 15 நாட்களாக போக்கு காட்டி வரும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத் துறையினர் முடிவு எடுத்தனர்.

தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
 

பிடிபட்ட யானை

 
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வனத் துறையினர் நேற்று காலை முதல் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து இரவு யானைக்கு மயக்க  ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது கால்நடை மருத்துவர் பயானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். தொடர்ந்து மூன்று மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த யானையை அதிகாலை 3 மணி அளவில் சிள்ளாரஹள்ளி மலைப் பகுதியில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம்  உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட ஆண் ஒற்றை யானையை லாரி மூலமாக அஞ்செட்டி வனப்பகுதியில் விடுவதற்கு வனத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
 

மக்கள் நிம்மதி

 
மேலும் கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், 3 மயங்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத் துறையினர் தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்பொழுது இந்த ஒற்றை ஆண் யானையால் சேதப்படுத்தப்பட்ட விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget